சிறுமுகை அருகே 75 ஆண்டு பழமை வாய்ந்த மகா மாரியம்மன் கோவில் திருவிழா.
சிறுமுகை
அருகே உள்ள நால்ரோடு , எலகம் பாளையம் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் 5 ஆம்
ஆண்டு திருவிழா கடந்த 14 ந்தேதி பூச்சாட்டுடன் துவங்கி சிறப்பாக
நடந்துவருகிறது.15 ந்தேதி கோவில் முன்பு கம்பம் நட்டு அதனை சுற்றி
பக்தர்கள் ஆடிவருகின்றனர்.20 ந்தேதி ஊர்கவுடர்,மற்றும் ஊர் பட்டக்காரர்
வீட்டு சீர் கொண்டுவரும் நிகழ்ச்சி நடந்தது.அம்மன் அலங்காரம் செய்யப்பட்டு
ஊர்வலமாக அழைத்துவரும் நிகழ்ச்சி நடந்தது.பின்னர் 21 ந்தேதி சக்தி கரகம்
எடுத்தல்,பூச்சட்டி எடுத்தல்,உச்சி பூஜை,மாவிளக்கு எடுதுவருதல் ஆகிவை
நடந்தன.முக்கிய நாளான நேற்று இரவு நூற்றுக்கணக்கான இளைஞர்கள் மேளதாளங்கள்
முழங்க கம்பத்தை சுற்றி ஆடிவந்து அம்மனை தரிசித்தனர்.இரவு 12 மணிக்கு
கம்பம் பிடுங்கப்பட்டு ஆற்றில் விடப்பட்டது.இன்று சாமி ஊர்வலம்,மஞ்சள்
நீராடுதல் ஆகியவை நடந்தன.நாளை மறுபூஜை நடக்கிறது.விழாவிற்கான ஏற்பாடுகளை
எலகம்பாளையம்,நால்ரோடு,சேரன்நகர்,ஊர்கவுடர் ,ஊர் பட்டக்காரர்.மற்றும்
கோவில் கமிட்டியினர்,பொதுமக்கள்,இளைஞர் நற்பணி மன்றத்தினர்,மகளிர் சுய
உதவிக்குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.
0 comments:
Post a Comment