தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday, April 24, 2014

263 வாக்குசாவடிகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பப்பட்ட 
வாக்குப்பதிவு எந்திரங்கள்
 

பவானிசாகர் தொகுதிக்குட்பட்ட 263 வாக்குசாவடிகளுக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் அதனைச் சார்ந்த எழுது பொருள்கள், உபகரணங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தனிவாகனங்களில் புதன்கிழமை அனுப்பப்பட்டன.

மக்களவை தேர்தல் வியாழக்கிழமை நடைபெறுவதையொட்டி, பவானிசாகர் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட 263 வாக்குசாவடிகளுக்கு தேவையான வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் அனுப்பும் பணி சத்தி வட்டாட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை காலை துவங்கியது. 

தேர்தல் நடத்தும் துணை அலுவலர்கள் த.முத்துமாணிக்கம்,அப்பாச்சியப்பன் மற்றும் தேர்தல் பணியாளர்கள் ஆகியோர்  வாக்குப்பதிவுக்கான அனைத்தும் பொருள்களையும் ஆய்வு செய்த பின்னரே அந்தந்த வாக்குசாவடிக்கு அனுப்பி வைத்தனர். தாளவாடி, கடம்பூர், தலமலை மலைப்பகுதியில் உள்ள 73  வாக்குசாவடி மையங்கள் உட்பட 263 மையங்களுக்கும் வாக்குப்பதிவு எந்திரங்கள்  சென்றடைந்துவிட்டன என்பதை தேர்தல் அதிகாரிகள் புதன்கிழமை மாலை உறுதி செய்தனர். தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அரசு பணியாளர்கள் சம்பந்தப்பட்ட வாக்குசாவடிக்கு செல்லுமாறு அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

பவானிசாகர் சட்டப்பேரவையில் 2 லட்சத்து 31 ஆயிரத்து 763 வாக்காளர்கள் உள்ளனர்.  மொத்தமுள்ள 263 வாக்குசாவடிகளில் 17 வாக்குசாவடிகள் பதற்றமானவை என அறிவிக்கப்பட்டுள்ளன. தேர்தலையொட்டி, துணை ராணுவபடையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்..  .

0 comments:

Post a Comment