தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு புன்செய் புளியம்பட்டி மாரியம்மன் அம்மன் கோவில், ஊத்துக்குளி அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள்.
தமிழ்ப்புத்தாண்டை
முன்னிட்டு புன்செய் புளியம்பட்டி மாரியம்மன் அம்மன் கோவில், ஊத்துக்குளி
அம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் அதிகாலை நடைதிறக்கப்பட்டு சிறப்பு
பூஜைகள் நடைபெற்றன.
விழாவையொட்டி,
அருள்மிகு மாரியம்மன் அம்மன் கோவில், ஊத்துக்குளி அம்மன் கோவிலில்
அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டது. அம்மனுக்கு கனிகள் படைக்கப்பட்டு
சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. அதனைத் தொடர்ந்து, அம்மன் கனிகள்
அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் நீண்ட வரிசையில்
நின்று அம்மனை வழிபட்டனர். வணிகர்கள் கோவிலில் வரவு செலவு நோட்டுகளை வைத்து
புதிய கணக்கு துவக்கினர்.
0 comments:
Post a Comment