அதிமுகவுக்கு வேட்டுவ கவுண்டர்கள் பேரவை ஆதரவு
மக்களவைத் தேர்தலில் அதிமுகவுக்கு வேட்டுவ கவுண்டர்கள் பேரவை ஆதரவு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியது
சத்தியமங்கலத்தில் சனிக்கிழமை நடைபெற்ற வேட்டுவ
கவுண்டர்கள் பேரவைக் கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் க.சுந்தரமூர்த்தி தலைமை
வகித்தார். முன்னாள் எம்பி வி.கே.சின்னச்சாமி முன்னிலை வகித்தார். மாநில
பொதுச்செயலாளர் ஏஎஸ்எம் சந்திரசேகரன், சத்தி பொறுப்பாளர் கே.சி.டபிள்யூ
குமார் ஆகியோர் வரவேற்றனர்.
கூட்டத்தில்,தமிழ்நாட்டில் நீலகிரி, திருப்பூர், ஈரோடு
மதுரை, திண்டுக்கல், கரூர், ஈரோடு,சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில்
சுமார் 12 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். வேட்டுவர் சமுதாயத்துக்கு உரிய
மரியாதை அளித்து சட்டமன்ற உறுப்பினர், மேயர், மக்களவை உறுப்பினர் உள்ளிட்ட
பல்வேறு உயர் பதவிகளை அளித்து சமூக அந்தஸ்து வழங்கிய அதிமுகவை ஆதரிக்க
முடிவு செய்யப்பட்டுள்ளது. அதிமுக துவங்கிய நாள் முதல் இன்று வரை அளித்து
வந்த ஆதரவை இந்த பேரவை தொடர்ந்து அளிக்கும்.அதிமுகவுக்கு ஆதரவாக பேரவையினர்
வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்து வெற்ற பெற செய்ய வேண்டும் உள்ளிட்ட
பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.
0 comments:
Post a Comment