தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday, August 18, 2014

சத்தியில் கோகுலாஷ்டமி கொண்டாட்டம்


கோகுலாஷ்டமியையொட்டி, சத்தி வேணுகோபாலசுவாமி ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது.

சத்தி ஸ்ரீ வேணுகோபால சுவாமி ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை சிறப்பு பூஜையுடன் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழா துவங்கியது. விழாவையொட்டி, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீ ரங்கநாத பெருமாள், ஸ்ரீ லட்சுமிநாரயணசுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

கோவில் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்ற ஸ்ரீமத் கீதா ஹோமத்தில் 50 பெண் பக்தர்கள் பங்கேற்று, பகவத் கீதை பஜனைகளுடன் காயத்திரி மந்திரங்களை பாடினர். நண்பகல் 1 மணிக்கு அபிஷேகமும், இரவு 7 மணிக்கு சுவாமி புறப்பாடும், உறியடி விழாவும் நடைபெற்றன. 

விழா ஏற்பாடுகளை கோயில் அர்ச்சகர் ஆனந்த ஐயர் தலைமையில் திருப்பணிக் குழுவினர் செய்தனர்.

0 comments:

Post a Comment