தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, August 12, 2014

மேட்டுப்பாளையம் நகராட்சி ஸ்வர்ண  ஜெயந்தி நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டம்[எஸ்.ஜே.எஸ்.ஆர்.ஒய்] பள்ளி மாணவ மாணவிகளுக்கான மழைநீர் சேமிப்பு விழிப்பு கலைநிகழ்ச்சி.

நகரமன்ற தலைவர் டி.சதீஷ்குமார் துவக்கிவைத்தார் .




மேட்டுப்பாளையம்,ஆகஸ்ட்.12.மேட்டுப்பாளையம் நகராட்சி ஸ்வர்ண ஜெயந்தி  நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டம்[எஸ்.ஜே.எஸ்.ஆர்.ஒய்]மூலம் தமிழக முதல்வரின் சிறப்பு திட்டமான  மழைநீர் சேமிப்பு திட்டம் குறித்து  விழிப்பு கலைநிகழ்ச்சிகள் சிவசக்தி திருமணமண்டபத்தில் இன்று துவங்கியது.நகரமன்ற தலைவர் டி.சதீஷ்குமார் தலைமை தாங்கினார்.துணைத்தலைவர் ரமாசெல்வி,நகரமைப்பு அலுவலர் சத்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சமுதாய அமைப்பாளர் முத்துலட்சுமி வரவேற்று பேசினார்.நிகழ்ச்சியில் மேட்டுப்பாளையம் நகராட்சி பகுதிகளை சேர்ந்த நகரவை பெண்கள் மேல்நிலைப்பள்ளி,மகாஜன மேல்நிலைப்பள்ளி, பகவான் மகாவீர் நகராட்சி நடுநிலைப்பள்ளி,சி.எஸ்.ஐ.நடுநிலைப்பள்ளி, மணிநகர் நகராட்சி  நடுநிலைப்பள்ளி,ஜி..எம்.ஆர்.சி.நடுநிலைப்பள்ளி,ஆகிய 6 பள்ளிகளை சேர்ந்த 120 மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.இதில் மழைநீர் சேமிப்பு குறித்து பேச்சுப்போட்டி,கட்டுரைப் போட்டி ,கவிதைப்போட்டி, ஓவியப்போட்டி ஆகியவற்றிக்கான இறுதிப்போட்டிகள் நடைபெற்றன. பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள்,ஆசிரியைகள் நடுவர்களாக இருந்து இறுதிப்போட்டிகளை நடத்தினர், இறுதிப்போட்டியில் தேர்வுசெய்யப்படும் மாணவ மாணவிகளுக்கு மேட்டுப்பாளையம் நகராட்சி ஸ்வர்ண ஜெயந்தி  நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டம்[எஸ்.ஜே.எஸ்.ஆர்.ஒய்] மூலம் பரிசுகள்,மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளதாக நகரமன்ற தலைவர் டி.சதீஷ்குமார் தெரிவித்தார்.முடிவில் சமுதாய அமைப்பாளர் சுஜிகுமாரி நன்றி கூறினார்.

0 comments:

Post a Comment