திரைப்படப் பாடல்கள் எழுதுவது கடினம் என்று திரைப்பட பாடலாசிரியரும், கவிஞருமான அறிவுமதி பேசினார்.
ஈரோடு, செங்குந்தர் பொறியியல் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தமிழ் மன்றம், நுண்கலை மன்றம் ஆகியவற்றின் 2014-15-ஆம் கல்வி ஆண்டுக்கான நடவடிக்கைகள் துவக்க விழாவில் அவர் பேசியதாவது:
கவிதை எழுதுவது எளிது. ஆனால் திரைப்படப் பாடல்கள் எழுதுவதுதான் கடினம். திரைப்படப் பாடல் எழுதவேண்டும் என்றால் பல்வேறு ஊர்களுக்குப் பயணம் செய்து பல்வேறு மக்களின் வாழ்க்கை முறையை உள்வாங்கிக் கொண்டு எழுதவேண்டும். அப்போதுதான் பாடல் சிறப்பானதாக இருக்கும் என்றார்.
தொடர்ந்து, மரபுக் கவிதைகளுக்கும் ஹைக்கூ கவிதைகளுக்கும் உள்ள வேறுபாடுகள் மற்றும் ஹைக்கூ கவிதைகள் எழுதுவது குறித்தும் அவர் பயிற்சி அளித்தார்.
விழாவுக்கு, கல்லூரிச் செயலாளர் எஸ்.சிவானந்தன் தலைமை வகித்தார்.
தாளாளர் இரா.மோகன்ராஜ், முதல்வர் (பொ) எல்.பூபதி, தமிழ் மன்ற ஒருங்கிணைப்பாளர்கள் மு.தங்கவேல், ப.அகிலமுதன், நுண்கலை மன்ற ஒருங்கிணைப்பாளர்கள் ப.கருணாகரன், இரா.சித்ரா உள்பட பலர் பங்கேற்றனர்.
0 comments:
Post a Comment