தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday, August 9, 2014

சத்தியமங்கலம் வாழைத்தோட்டத்தில் மூதாட்டி கொலை



சத்தியமங்கலம்,ஆக 10:
சத்தியமங்கலம் வாழைத்தோட்டத்தில் மூதாட்டி கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

சத்தியமங்கலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்துக்கு அருகே உள்ளது எஸ்ஆர்என் தோட்டம்.  இந்த தோட்டத்தை அந்தியூரைச் சேர்ந்த ராசு என்பவர் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில், தோட்டத்தில் உள்ள வாழைஇலைகளை கூலித்தொழிலாளர்கள் அறுத்துக் கொண்டிருந்தனர்.அப்போது, தூர்நாற்றம் வீசும் இடத்தை பார்த்தபோது மூதாட்டி கொலை செய்யப்பட்டது கிடப்பது தெரியவந்தது. இது குறித்து தொழிலாளர்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த காவல் ஆயவாளர் முத்துச்சாமி மூதாட்டி உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்கு சத்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து சத்தி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

0 comments:

Post a Comment