இந்தியாவின் தொன்மையான மொழி தமிழே! - நாவலாசிரியர் பொன்னீலன்
இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் தொன்மையான மொழி தமிழே என அகில
இந்திய முற்போக்கு எழுத்தாளர் சம்மேளனத் தலைவர் நாவலாசிரியர் பொன்னீலன்
கூறினார்.
மதுரை காளவாசல் பகுதியில் தமுஎகச சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அனைத்து மொழிகளுக்கும் சம உரிமை கோரிய உண்ணாவிரதப் போராட்டத்தில் அவர் ஆற்றி உரை:
உலக மொழிகளுக்கெல்லாம் தாய் மொழி சம்ஸ்கிருதம் என்பது சரியல்ல. இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு மொழி தாய் மொழியாக உள்ளது. ஆனால், சம்ஸ்கிருதம் எந்த மாநிலத்திலும் தாய் மொழியாக இல்லை. பேச்சு மொழியாக இல்லாததை உலகத் தாய் மொழி என்பது சரியல்ல. இந்தியாவின் தொன்மையான மொழிகளில் தமிழானது 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும்.
ஆகவே, தமிழை ஆட்சி மொழியாக, நீதிமன்ற மொழியாக ஆலய மொழியாக அறிவிக்க வேண்டும் என்ற தமுஎகசவின் போராட்டம் வெற்றி பெறும். தமிழ் ஆட்சிமொழிக் கோரிக்கைக்கு கலை இலக்கிய பெருமன்றம் துணை நிற்கும் என்றார்.
பகுத்தறிவாளர் கழகத் தலைவர் நேரு, மூட்டா 2 ஆம் மண்டலப் பொருளாளர் பேராசிரியர் பெ.க.பெரியசாமி, அகில இந்திய வழக்குரைஞர்கள் சங்க மாநிலப் பொதுச் செயலர் என்.முத்து அமுதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மதுரை காளவாசல் பகுதியில் தமுஎகச சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அனைத்து மொழிகளுக்கும் சம உரிமை கோரிய உண்ணாவிரதப் போராட்டத்தில் அவர் ஆற்றி உரை:
உலக மொழிகளுக்கெல்லாம் தாய் மொழி சம்ஸ்கிருதம் என்பது சரியல்ல. இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு மொழி தாய் மொழியாக உள்ளது. ஆனால், சம்ஸ்கிருதம் எந்த மாநிலத்திலும் தாய் மொழியாக இல்லை. பேச்சு மொழியாக இல்லாததை உலகத் தாய் மொழி என்பது சரியல்ல. இந்தியாவின் தொன்மையான மொழிகளில் தமிழானது 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும்.
ஆகவே, தமிழை ஆட்சி மொழியாக, நீதிமன்ற மொழியாக ஆலய மொழியாக அறிவிக்க வேண்டும் என்ற தமுஎகசவின் போராட்டம் வெற்றி பெறும். தமிழ் ஆட்சிமொழிக் கோரிக்கைக்கு கலை இலக்கிய பெருமன்றம் துணை நிற்கும் என்றார்.
பகுத்தறிவாளர் கழகத் தலைவர் நேரு, மூட்டா 2 ஆம் மண்டலப் பொருளாளர் பேராசிரியர் பெ.க.பெரியசாமி, அகில இந்திய வழக்குரைஞர்கள் சங்க மாநிலப் பொதுச் செயலர் என்.முத்து அமுதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment