அரசு உதவி வழக்கறிஞர் தேர்வில் மேட்டுப்பா ளையம் வழக்கறிஞர் வடிவேல் மாநிலத்திலே யே முதலாவதாக தேர்ச்சி பெ ற்று சாதனை
அரசு உதவி வழக்கறிஞர் தேர்வில் மேட்டுப்பாளையம் வழக்கறிஞர் வடிவேல் மாநிலத்திலேயே முதலாவதாக தேர்ச்சி.பெற்று சாதனை.
மேட்டுப்பாளையம்.அகஸ்ட்.12.தமி ழ்நாடு
அரசுப்பணியாளர் தேர்வாணையம் [டி.என்.பி.எஸ்.சி]மூலம் அரசு உதவி வழக்கறிஞர்
களுக்கான தேர்வு கடந்த 24.4.13 மற்றும் எழுத்து தேர்வு 28.4.13 ஆகிய
தேதிகளில் தமிழ்நாடு முழுவதும் நடந்தது.அதில் தமிழ்நாடு முழுவதும் இருந்து
2500 வழக்கறிஞர்கள் கலந்துகொண்டு தேர்வு எழுதினார்கள்.தேர்வின் முடிவு
கடந்த 8.7.14 அன்று தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
அதில் 137 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு,சான்றிதழ் சரிபார்பிற்கு பிறகு
128 பேர்களை மட்டும் அழைத்து கடந்த 31.7.14,மற்றும் 1.8.14 ஆகிய தேதிகளில்
அரசு தேர்வாணைய அலுவலகத்தில் நேர்முகத்தேர்வு நடந்தது.எழுத்து தேர்வு
மற்றும் நேர்முகத்தேர்வின் முடிவுகளை கடந்தஆகஸ்ட் 1 ந்தேதி தேர்வாணைய
இணையதளத்தில் வெளியாகியது.
இதில் மேட்டுப்பாளையம் வழக்கறிஞர் எஸ்.வடிவேல் எழுத்துத்தேர்வில் மாநிலத்தில் இரண்டாவதாகவும்,நேர்முகத்தேர்வி ல் மாநிலத்திலேயே முதலாவதாகவும் தேர்ச்சி பெற்று இரண்டிலும் சேர்த்து மாநிலத்திலேயே முதலாவதாக தேர்ச்சி பெற்றுள்ளார்.
காரமடை அருகே உள்ள பெட்டதாபுரம் புதூரை சேர்ந்த சாதாரண விவசாயின்
மகனான இவர் பெட்டதாபுரம் ஆரம்ப பள்ளியில் 5 ஆம் வகுப்பும்,.காரமடை அரசு
மேல்நிலைப்பள்ளியில் 10 ஆம் வகுப்புவரையும் படித்தார்.புஜங்கனூர் அரசு
மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 வும்,பெரிய நாயக்கன் பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா
மிஷன் வித்தியாலயத்தில் பி.எஸ்.சி.வேதியியல் ,பட்டபடிப் பு படித்து,பின்னர்
கடந்த 2002-2005 ஆம் ஆண்டில் கோவை அரசு சட்டக் கல்லூரியில் பி.எல்.பட்டம்
பெற்றார்.பின்னர் மேட்டுப்பாளையத்தில் வழக்கறிஞராக பணியாற்றி
வருகிறார்.,இவருக்கு புனிதா என்ற மனைவியும்,ஒரு ஆண்,ஒரு பெண் குழந்தைகளும்
உள்ளனர்..
மாநில அளவில் சாதனை படைத்த வழக்கறிஞர் எஸ்.வடிவேலுவை மேட்டுப்பாளையம்
வழக்கறிஞர் சங்க தலைவர் ஆர்.ஏ.கனகசுந்தரம்,செயலாளர்
ஆர்.சிவக்குமார்,மற்றும் நிர்வாகிகள் வாழ்த்தி பாரட்டினார்கள்.
கடந்த
2011 -2012 ஆம் ஆண்டில் நடைபெற்ற அரசு உதவி வழக்கறிஞர் தேர்வில்
மேட்டுப்பாளையம் வழக்கறிஞர்கள் பிரின்ஸ் சாமுவேல் ராஜ்,மகேஸ்வரி ஆகியோர்
தேர்ச்சிபெற்று தற்போது அரசு வழக்கறிஞராக பணியாற்றிவருகிறார்கள் என்பது
குறிப்பிடத்தக்கது..
இந்த வெற்றி குறித்து வழக்கறிஞர் எஸ்.வடிவேலு
கூறியதாவது; அரசு பள்ளியில் தமிழ் வழியில் படித்து ,கடுமையான முயற்சியால்
இன்று அரசு உதவி வழக்கறிஞர் தேர்வில் மாநில அளவில் சாதனை படைத்துள்ளது
பெருமையாக உள்ளது.தமிழ் வழியில் படித்தாலும் சாதனை படைக்கமுடியும்.இவ்வாறு
அவர் கூறினார்.
0 comments:
Post a Comment