அதிமுகவினர் வெற்றி கொண்டாட்டம்
அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தலில் தமிழக முதல்வர் ஜெயலலிதா
போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் மீண்டும் பொதுச் செயலாளராக
தேர்ந்தெடுக்கப்பட்டதையொட்டி,சத்தியமங்கலத்தில் அதிமுகவினர் பட்டாசு
வெடித்து,பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.இதில் ஈரோடு மாவட்ட
ஊராட்சித் தலைவர் எஸ்.ஆர்.செல்வம், சத்தி நகர்மன்றத் தலைவர்
ஓ.எம்.சுப்பிரமணியம், சத்தியமங்கலம் ஒன்றிய செயலாளர்கள்
வி.சி.வரதராஜ்,சி.என்.மாரப்பன், மாவட்ட பேரவை செயலாளர் எஸ்.எஸ்.ஆறுமுகம்,
சத்தி நகர கூட்டுறவு வங்கித் தலைவர் எஸ்.கே.பழனிச்சாமி உள்ளிட்ட பலர்
கலந்துகொண்டனர்.
0 comments:
Post a Comment