தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday, August 20, 2014

இண்டியம்பாளையத்தில் ரூ. 22 லட்சத்தில் தார்ச்சாலை



இண்டியம்பாளையத்தில் ரூ. 22 லட்சம் மதிப்பிலான தார்ச்சாலை அமைப்பதற்கான பூமி பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.

சத்தியமங்கலத்தை அடுத்துள்ள அரசூர், இண்டியம்பாளையம் ஊராட்சியில் தாய்த் திட்டம் கூடுதல் நிதியில் இருந்து ரூ. 22 லட்சம் மதிப்பில் தார்ச்சாலை அமைக்கப்படுகிறது.

இதன் மூலமாக இண்டியம்பாளையம், புதுவலவு மற்றும் மேட்டுப்புதூர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பயன்பெறுவர். புதிய தார்ச்சாலை அமைப்பதற்கான பூமி பூஜையை ஈரோடு மாவட்ட ஊராட்சித் தலைவர் எஸ்.ஆர்.செல்வம் துவக்கி வைத்தார்.

இதில், சத்தி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் கே.ஏ.சுப்புலட்சுமி அய்யாசாமி, துணைத் தலைவர் சரவணகுமார், சத்தி அதிமுக ஒன்றியச் செயலாளர் (வடக்கு) சி.என்.மாரப்பன், இண்டியம்பாளையம் ஊராட்சித் தலைவர் ஐஎம்எஸ் கவிதா, ஒன்றியக்குழு உறுப்பினர் சகுந்தலா, சங்கு ஈஸ்வரர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

0 comments:

Post a Comment