தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, August 26, 2014

தோல்வி அடைந்தாலும் தொகுதி மக்களை சந்திப்பது திமுக பண்பு: முன்னாள் அமைச்சர் ஆ.ராசா

 
 
சத்தியமங்கலம்,ஆக 26:
மக்களவைத் தேர்தலில் தோல்வி அடைந்தாலும் தொகுதி மக்களை சந்திக்க வருவேன் என முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா தெரிவித்துள்ளார்.

நீலகிரி மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்விஅடைந்த முன்னாள் அமைச்சர் ஆ.ராசா சத்தியமங்கலத்தில் செவ்வாய்க்கிழமை தனக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். முன்னதாக,சத்தியமங்கலம் பழைய தினசரி மார்க்கெட் வளாகத்தில் திமுக கொடி ஏற்றிவைத்து ஆ.ராசா பேசியது:
திமுக வேட்பாளர்கள் தோற்றாலும் வெற்றி பெற்றாலும் மக்களைச் சந்திப்பது தான் திமுகவின் அடையாளம். நீலகிரி அதிமுக மக்களவை உறுப்பினர் சி.கோபாலகிருஷ்ணன் இதுவரை மக்களை சந்தித்து நன்றி தெரிவிக்க வரவில்லை என அனைத்து தரப்பு மக்களும் குற்றஞ்சாட்டுகின்றனர். டெல்லி நீதிமன்றத்தில் ஆஜராகி வந்தபோதிலும், இடைப்பட்ட காலங்களில் நீலகிரி மக்களை சந்திப்பேன். மேட்டுப்பாளையம், சிறுமுகை, காரமடை, புன்செய் புளியம்பட்டி, சத்தியமங்கலம் மக்களை சந்தித்து நன்றி தெரிவித்துள்ளேன். நாங்கள் தோல்வி அடைந்தாலும் வீட்டு நாயை போன்று  நன்றியுடன் மக்களை சந்திப்போம் என்றார். இதில் முன்னாள் எம்எல்ஏ, எல்.பி.தர்மலிங்கம்,திமுக நகர செயலாளர் எஸ்.ஆர்.வேலுச்சாமி, சத்தி ஒன்றிய திமுக செயலாளர் என்.சுப்பிரமணியம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

0 comments:

Post a Comment