தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, August 26, 2014

மேட்டுப்பாளையம் அரசு மருத்துவனையின் 130 வது ஆண்டு நிறைவு விழா.எம்.பி.க்கள்,எம்.எல்.ஏ பங்கேற்பு.


மேட்டுப்பாளையம்.ஆகஸ்ட்.26.கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை துவங்கப்பட்டு 130 ஆண்டுகள் நிறைவடைந்து 131 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.கோவை மாவட்டத்தில் சுதந்திரத்திற்கு முன்பு துவங்கப்பட்ட மருத்துவமனைகளில் இதுவும் ஒன்று.மிகவும் பழமை வாய்ந்த இந்த மருத்துவமனையின் ஆண்டு விழா மற்றும் மருத்துவமனை தின நடந்தது..விழாவிற்கு மேட்டுப்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ.ஓ.கே.சின்னராஜ் தலைமை தாங்கினார்..கோவை சுகாதாரப்பணிகள் இணை இயக்குனர் எம்.தாவூத் பாத்திமா முன்னிலை வகித்தார். .இரத்த வங்கி மருத்துவர் டி.,கே.செல்வராஜ் வரவேற்று பேசினார்..இளநிலை நிர்வாக அலுவலர் எம்.ராஜு அறிமுக உரை ஆற்றினார்..தலைமை மருத்துவர் எஸ்.சேரலாதன் ஆண்டறிக்கை வாசித்தார்.
 
விழாவில் நீலகிரி தொகுதி எம்.பி.சி.கோபாலகிருஷ்ணன்,மாநிலங்களை உறுப்பினர் ஏ.கே.செல்வராஜ்,ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு விழா பேருரை ஆற்றினார்கள்.
 
விழாவில் 130 ஆண்டுகளுக்கு முன்பு இந்த மருத்துவமனைக்கு இலவசமாக இடம் வழங்கிய ராமே கவுடர்,மற்றும் கணபதி கவுடர் குடும்ப வாரிசுகளான ஆர்.பழனிசாமி,ராமலிங்கம்,துளசி நிர்மலா ராமமூர்த்தி,ஜெயா நந்தகுமார்,சுலோச்சனா தினகரன் உட்பட பலருக்கு மருத்துவமனை சார்பில் பொன்னாடை போர்த்தி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் ,காரமடை லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் கே.பொன்னுசாமி,மேட்டுப்பாளையம் அனைத்து இந்து சமுதாய சங்க நந்தவன தலைவர்அருந்தகை அண்ணல், சி.பொன்னுசாமிகவுண்டர்,,ரோட்டரி சங்க தலைவர் டாக்டர் மு.இஸ்மாயில்,அரிமா சங்க தலைவர் எஸ்.ஜெயக்குமார்,நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் என்,வெங்கட்ராமன்,டாக்டர்கள் எஸ்.ரவிச்சந்திரன்,குருசாமி,கே.வம்சி,முன்னாள் அரிமா சங்க மாவட்ட ஆளுநர் பி.நவ்ரத்தன் மல்,நோயாளிகள் நலசங்க உறுப்பினர் வக்கீல் சாந்தமூர்தி,உட்பட பலர் கலந்துகொண்டு வாழ்த்தி பேசினார்கள்..தமிழக முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டம் குறித்து டாக்டர் பி.கார்த்திகேயன் விளக்கி பேசினார்.விழாவில்  மேட்டுப்பாளையம் ரோட்டரி சங்கம் சார்பில் தலைவர் டாக்டர் மு.இஸ்மாயில்,செயலாளர் மதன்குமார் ஆகியோர் அரசு மருத்துவமனை இரத்தவங்கிக்கு  உபகரணம் வாங்க ரூ.50 ஆயிரத்திற்கான காசோலையை தலைமை மருத்துவர் எஸ்.சேரலாதனிடம்  வழங்கினார்கள்..நிகழ்ச்சியில்மேட்டுப்பாளையம் நகராட்சி ஆணையர் கணேசன்,நகரமன்ற துணைத்தலைவர் ரமா செல்வி, மேட்டுப்பாளையம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க தலைவர் ஏ.வான்மதி சேட்,வக்கீல் ஆர்.சீனிவாசன்,அன்னபூர்ணா ஆர்.கிருஷ்ணன்,அரிமா சங்க தலைவர் எஸ்.ஜெயக்குமார்,கே.பி.எஸ்.மருத்துவமனை நிர்வாக இயக்குனர் ரவிக்குமார்,மகேஸ்வரி,சூரியா மருத்துவமனை டாக்டர் பி. சுதாகர்,சாரதா டெர்ரி நிறுவன  காசாளர் ராமானுஜம், தீப்பொறி சாகுல் அமீது,ராஜா முகமது,,உட்பட நகரமன்ற உறுப்பினர்கள்,மருத்துவர்கள்,செவிலியர்கள்,பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஆய்வக நுட்புனர் கே.ராஜேந்திரன் நன்றி கூறினார்.

0 comments:

Post a Comment