தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday, August 18, 2014

சசி பெருமாளின் உண்ணாவிரதம்: சமூக நல ஆர்வலர்கள் ஆதரவு


நாடு முழுவதும் பூரண மது விலக்குச் சட்டத்தை அமல்படுத்தக் கோரி, தில்லியில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தேசிய மக்கள் கூட்டமைப்பின் தலைவரும், காந்தியவாதியுமான சசிபெருமாளுக்கு தில்லியை சேர்ந்த சமூக நல ஆர்வலர்கள் ஞாயிற்றுக்கிழமை ஆதரவு தெரிவித்தனர்.

தில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த ஜூலை 30-ஆம் தேதி முதல் சசிபெருமாள் காலவரையற்ற  உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

இந்த நிலையில், அவரது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தில்லி சக்குர்பூர், சாகர்பூர், வசீகர்பூர், இந்திரபுரி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சமூக நல ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சிக்கு வட்டூர் மாணிக்கம் தலைமை வகித்தார். "சிடோ' தலைவர் மாரியப்பன் முன்னிலை வகித்தார். செங்கோட்டையன், முகிலன், மனோகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அகில இந்திய ஹரிஜன லீக் மணி நன்றி கூறினார்.

"இந்திய அரசியல்சாசன சட்ட விதிமுறைகளுக்கு உள்பட்டு நாடு முழுவதும் பூரண மதுவிலக்குச் சட்டத்தை அமல்படுத்தக் கோரியும், போதைப் பொருள்களுக்குத் தடை விதிக்கக் கோரியும் தேசிய மக்கள் கூட்டமைப்பின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது' என்று தேசிய மக்கள் கூட்டமைப்பின் தலைவர் சசிபெருமாள் தெரிவித்தார்.

0 comments:

Post a Comment