தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Sunday, August 31, 2014

சத்தியமங்கலத்தில் விநாயகர் சிலை ஊர்வலம்





சத்தியமங்கலம், ஆக 31:
சத்தியமங்கலத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊர்வலத்தில் 86 விநாயகர் சிலைகள் எடுத்துவரப்பட்டு பவானிஆற்றில் கரைக்கப்பட்டது.

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, சத்தியமங்கலம் நகர்ப்பகுதி, கொத்துக்காடு, அரியப்பம்பாளையம்,இண்டியம்பாளை
யம், தாசம்பாளையம், பவானிசாகர், பகுத்தம்பாளையம்,உப்புப்பள்ளம், புன்செய் புளியம்பட்டி, கணபதிபாளையம் மற்றும் சாணார்பதி ஆகிய இடங்களில் இந்துமுன்னணி சார்பில் 86   விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடுகள் நடைபெற்றன.

சத்தியில் நடைபெறும் விநாயகர் சிலை ஊர்வலத்தில் கலந்துகொள்வதற்காக பல்வேறு இடங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட விநாயகர் சிலைகள் எஸ்ஆர்டி மைதானத்தில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டன. ஈரோடு மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் எஸ்.ஆர்.செல்வம் ஊர்வலத்தை துவக்கி வைத்தார். சத்தி நகர்மன்ற தலைவர் ஓ.எம்.சுப்பிரமணியம் முன்னிலை வகித்தார். இந்த ஊர்வலம் மைசூர் சாலை, ஆற்றுப்பாலம், கோட்டுவீராம்பாளையம், கடைவீதி, பெரியபள்ளிவாசல் வீதி, சத்யா தியேட்டர், திப்புசுல்தான் சாலை வழியாக பவானிஆற்றை சென்றடைந்தது. ஊர்வலத்தில் பங்கேற்ற இந்து முன்னணியினர் விநாயாகர் சிலைகளு்க்கு சிறப்பு பூஜைகள் செய்து  சிலையை ஆற்றில் கரைத்தனர்.

ஊர்வலத்தையொட்டி, ஈரோடு மாவட்ட கண்காணிப்பாளர் சிபிசக்கரவர்த்தி தலைமையில் 4 டிஎஸ்பிகள், 11 காவல்ஆய்வாளர்கள், 73 உதவிகாவல்ஆய்வாளர்கள், 268 காவலர்கள் என மொத்தமாக 356 பேர் பாதுபாப்பு பணியில் ஈடுபட்டனர்.

0 comments:

Post a Comment