புன்செய் புளியம்பட்டி புத்தக திருவிழா முதல் கட்ட ஆலோசனை கூட்டம்
புன்செய் புளியம்பட்டி விடியல் சமூகநல இயக்கம் சார்பில் 3 ஆம் ஆண்டு புன்செய் புளியம்பட்டி புத்தக திருவிழா வருகின்ற அக்டோபர் மாதம் 8 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது. இந்த ஆண்டும் புத்தக திருவிழாவை இன்னும் சிறப்பாக நடத்துவது குறித்து முதல் கட்ட ஆலோசனை கூட்டம் நாளை (24-08-2014) காலை 10 மணியளவில் மாதம்பாளையம் ரோட்டில் உள்ள விடியல் கம்ப்யூட்டர் எஜுகேசன் சென்டரில் நடைபெற உள்ளது. அது சமயம் புத்தக திருவிழாவை சிறப்பாக நடத்த தங்கள் மேலான கருத்துகளை வழங்க புத்தக ஆர்வலர்களையும், சமூக ஆர்வலர்களையும் அன்புடன் அழைக்கிறோம். தங்கள் கருத்துகளை விடியல் செயலாளர் எஸ்.ஜெயகாந்தன் - 98427 80240 என்ற எண்ணிலும் தெரிவிக்கலாம். நன்றி.
0 comments:
Post a Comment