தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday, August 20, 2014

புஞ்சைபுளியம்பட்டி அரசு துவக்கப்பள்ளியில் 68 வது  சுதந்திரதின, மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் விழா.



புஞ்சைபுளியம்பட்டி,ஊராட்சி ஒன்றிய அரசு துவக்கப்பள்ளியில் சுதந்திரதின,மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

ஈரோடு மாவட்டம்,புஞ்சைபுளியம்பட்டி,ஊராட்சி ஒன்றிய அரசு துவக்கப்பள்ளியில் நடந்த  சுதந்திரதினவிழாவில், நகரமன்ற துணைத்தலைவர்  டி .பாபு தேசியக்கொடியை ஏற்றிவைத்தார்.,ஊராட்சி ஒன்றிய அரசு துவக்கப்பள்ளி வளாகத்தில் நடந்த சுதந்திர தினவிழாவில் உதவி தொடக்க கல்வி அலுவலர் எஸ்.விஜயராணி தலைமை வகித்து பேசினார்.ட்ரீ அறக்கட்டளை தலைவர் ஆர்.சீனிவாசன் வரவேற்று பேசினார்.
தலைமை ஆசிரியர் இரா.முத்து,கல்வியாளர் வெற்றிவேந்தன்,பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் வேந்தன்,மீனாட்சிசுந்தரம்,சிவஜோதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகரமன்றதுணைத்தலைவர் டி .பாபு தேசியக்கொடியை ஏற்றிவைத்து,வாழ்த்தி பேசினார்.பின்னர்,அனைவரும் கொடிவணக்கம் செலுத்தினர்.தொடர்ந்து,மாணவ-மாணவியர், பெற்றோர்கள், பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. 

சிறப்பு அழைப்பாளராக, நகரமன்ற தலைவர் பி.எஸ்.அன்பு கலந்துகொண்டு, மாணவ-மாணவியர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கி, சிறப்புரையாற்றினார்.விழாவில்.500 மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.அவற்றை மாணவ-மாணவியர்கள், ஆர்வமுடன் பெற்றுக்கொண்டனர்.

விழாவில், ஓய்வுபெற்ற அஞ்சலக அலுவலர் நடராஜன் ,நந்தகுமார், மற்றும்,மாணவ மாணவியர்,தன்னார்வலர்கள்,ஆசிரிய-ஆசிரியைகள், கிராமக்கல்வி குழுவினர், பெற்றோர்கள்,பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

0 comments:

Post a Comment