யானை தாக்கி முதியவர் பலி
சத்தி கடம்பூர் அருகே யானை தாக்கியதில் முதியவர் பலியானார்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், கடம்பூர் மலைப் பகுதி சின்னசாலட்டியைச் சேர்ந்தவர் ஆண்டிக்கவுண்டர் (80). இவர் ஞாயிற்றுக்கிழமை சின்னசாலட்டி வனத்தில் மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றார். மாலை 4 மணிக்கு முதியவர் மேய்ச்சல் மாடுகளுடன் கிராமத்துக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, புதர் மறைவில் இருந்து வந்த யானை ஆண்டிக்கவுண்டரை தாக்கியதில், அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இதுகுறித்து, கிராம மக்கள் வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். கடம்பூர் போலீஸார் ஆண்டிக்கவுண்டர் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சத்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச் சம்பவம் குறித்து கடம்பூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், கடம்பூர் மலைப் பகுதி சின்னசாலட்டியைச் சேர்ந்தவர் ஆண்டிக்கவுண்டர் (80). இவர் ஞாயிற்றுக்கிழமை சின்னசாலட்டி வனத்தில் மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றார். மாலை 4 மணிக்கு முதியவர் மேய்ச்சல் மாடுகளுடன் கிராமத்துக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, புதர் மறைவில் இருந்து வந்த யானை ஆண்டிக்கவுண்டரை தாக்கியதில், அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இதுகுறித்து, கிராம மக்கள் வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். கடம்பூர் போலீஸார் ஆண்டிக்கவுண்டர் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சத்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச் சம்பவம் குறித்து கடம்பூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
0 comments:
Post a Comment