தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday, August 21, 2014

சத்தியமங்கலத்தில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற நடவடிக்கை 


சத்தியமங்கலம், வடக்குப்பேட்டை, திப்புசுல்தான் சாலையில் மழைநீர் வடிகால் அமைக்க உள்ளதால் அப்பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கையில் சத்தி நகராட்சியினர் ஈடுபட்டுள்ளனர்.

இப்பகுதியில் தேங்கி நிற்கும் மழைநீரை வெளியேற்றுவதற்காக சாலைகளின் இருபுறமும் ரூ. 34 கோடி செலவில் மழைநீர் வடிகால் கட்டப்படுகிறது. இதையடுத்து, நகராட்சிக்கு சொந்தமான இடங்களை ஆக்கிரமித்துள்ள கடை உரிமையாளர்களுக்கு நகராட்சி சார்பில் எச்சரிக்கை நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.

இதற்கான காலக்கெடு புதன்கிழமையுடன் நிறைவுற்றதால் ஆக்கிரமிப்பாளர்கள் நகராட்சியிடம் கால அவசாகம் கேட்டுள்ளனர். ஆக்கிரமிப்பாளர்கள், ஆக்கிமிப்புகளைத் தாங்களாகவே அகற்றிக் கொள்ளவேண்டும். இல்லையெனில், நகராட்சி சார்பில் அகற்றப்பட்டு அதற்கான செலவுத் தொகை ஆக்கிரமிப்பாளரிடமே வசூலிக்கப்படும்.

மேலும், கடை உரிமமும் ரத்து செய்யப்படும். சத்தி வாரச் சந்தை சந்திப்பு முதல் கோம்புப் பள்ளம் வரை தேசிய நெடுஞ்சாலை செல்வதால் சுமார் 2 கி.மீ. வரை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என நகராட்சி அலுவலர்கள் தண்டோரா மூலமாக அறிவித்தனர்.

நகராட்சிக்கு எதிராக ஆக்கிரமிப்பாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் நகராட்சிக்கு சாதகமாக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் ஆக்கிரமிப்பு இடங்களைக் கைப்பற்ற நகராட்சியினர் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

0 comments:

Post a Comment