தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday, August 18, 2014

புஞ்சை புளியம்பட்டியில் கஞ்சி கலயத்துடன் பெண்கள் ஊர்வலம்

 
புஞ்சை புளியம்பட்டி மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி கோவில் சார்பில் ஆடி பூரத்தை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் வேள்வி நடந்தது. இதைதொடர்ந்து பக்தர்கள் பால் அபிஷேகம் செய்தனர்.

பின்னர் மாலை கண்ணப்பர் மகால் முன்பு கஞ்சி கலய ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தில் ஏராளமான பெண்கள் கஞ்சி கலயத்தை தலையில் சுமந்தபடி ஊர்வலமாக சென்றனர்.

ஊர்வலம் மாதம்பாளையம் ரோடு, சத்தி மெயின் ரோடு வழியாக கோவிலை வந்தடைந்தது. கோவிலில் காலை முதல் மாலை வரை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

விழாவுக்கான ஏற்பாடுகளை புளியம்பட்டி ஆதிபரா சக்தி வழிபாட்டு மன்றத்தினர் செய்து இருந்தனர்.

0 comments:

Post a Comment