கொற்கை நாவல், இந்த ஆண்டுக்கான இலக்கியத்திற்கான சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.
கடல் பிரதேசத்தின் 86 ஆண்டு கால வரலாற்றை, தனது புதிய நாவலான கொற்கையில் எடுத்துக் காட்டியிருக்கிறார் எழுத்தாளர் ஜோ டி குருஸ்.
கொற்கை துறைமுக
பிரதேசத்தில் 1914ல் ஆரம்பமாகும் நாவலின் கதையானது 2000 ஆண்டில் நிறைவு
பெறுகிறது. எண்ணற்ற தகவல்களுடனும் பாத்திரங்களுடனும் கூறிச் செல்கிறார்
நாவலாசிரியர் குருஸ்.
இவர் ஏற்கனவே ஆழி சூழ் உலகு என்ற நாவலை
எழுதியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கடற்கரை கிராமம், மணப்பாட்டை
சேர்ந்தவர். நெல்லை தூய சவேரியார் மேல்நிலைப்பள்ளியிலும், சென்னை லயொலா
கல்லூரியிலும் பயின்றவர்.
நல்வாழ்த்துக்கள்!
0 comments:
Post a Comment