மண்டல மற்றும் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் அம்மா மெட்ரிக் பள்ளி சாதனை
********************************************************************************************************
|
விளையாட்டில் சாதனை படைத்த மாணவ மாணவியர்களுக்கு பாராட்டு |
புன்செய் புளியம்பட்டி அம்மா மெட்ரிக் பள்ளி மாணவ மாணவியர்கள்
சமீபத்தில் நடைபெற்ற மண்டல மற்றும் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில்
பல்வேறு பிரிவுகளில் சிறப்பிடம் பெற்று சாதனை பிடித்துள்ளனர்.
|
இளையோர் பிரிவிற்கான எறிபந்து போட்டியில் இரண்டாமிடம் பெற்ற மாணவர்கள் |
|
மூத்தோர் பிரிவிற்கான வளைகோல் போட்டியில் இரண்டாமிடம் பிடித்த மாணவிகள் |
|
|
|
|
சதுரங்க போட்டியில் இரண்டாமிடம் பிடித்த மாணவிகள் ராகவி, சுபாஷினி |
|
மூத்தோர் பிரிவு கேரம் போட்டியில் ரெட்டையர் பிரிவில் இரண்டாமிடம் பெற்றுள்ள மாணவிகள் கனிஷ்கா, யமுனாதேவி, காருண்யா |
மாணவியருக்கான இளையோர் மற்றும் மூத்தோர் கேரம் போட்டியில் இரண்டாம்
பிடித்துள்ளனர். அதேபோல் மாநில அளவிலான கேரம் போட்டியில் அம்மா மெட்ரிக்
பள்ளி மாணவியர்கள் 4 பேர் மாவட்ட அளவில் இடம் பிடித்துள்ளனர். ஈரோடு மாவட்ட
அளவிலான எறிபந்து போட்டியில் முதலிடம் மற்றும் இளையோருக்கான எறிபந்து
போட்டியில் இரண்டாமிடம் பிடித்துள்ளனர். மாணவியருக்கான வளைகோல் போட்டியில்
மூத்தோர் பிரிவில் இரண்டாமிடம் பிடித்தனர். மாணவியருக்கான சதுரங்க
போட்டியில் இளையோர் பிரிவில் இரண்டாமிடமும், மூத்தோர் பிரிவில்
மூன்றாமிடமும் பிடித்தனர்.
பல்வேறு போட்டியில் வெற்றிபெற்ற மாணவ மாணவியர்களை அம்மா மெட்ரிக்
பள்ளியின் நிர்வாக இயக்குனரும், புளியம்பட்டி நகராட்சி தலைவருமான
பி.எஸ்.அன்பு, பள்ளி தாளாளர் சம்பூர்ணம் சாமிநாதன், செயலாளர் எ.ராணி
லக்ஷ்மி அன்பு, உடல்கல்வி ஆசிரியர் வரதராஜ் மற்றும் பள்ளி ஆசிரியர்கள்,
மாணவ மாணவியர்கள் பாராட்டினர்.
0 comments:
Post a Comment