நான் பிரதமர் வேட்பாளர் என்பது அதிமுகவினரின் விருப்பம்: ஜெயலலிதா பேட்டி
*********************************************************************************
அ.தி.மு.க. செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நிறைவடைந்த பிறகு மண்டபத்திற்கு வெளியே செய்தியாளர்களுக்கு ஜெயலலிதா அளித்த பேட்டி:
கேள்வி: வரும் லோக்சபா தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவீர்களா?
பதில்: கூட்டணி குறித்து உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும். அதற்கான அதிகாரத்தை கட்சி எனக்கு வழங்கியுள்ளது.
கேள்வி: - உங்களை பிரதமர் வேட்பாளர் என்று சொல்லுகிறார்களே?
பதில்: அது எங்களது கட்சியினரின் விருப்பம். அதை பற்றி நான் இப்போது சொல்வதற்கு இல்லை.
கேள்வி: வரும் லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க.வின் தேர்தல் முழக்கம் என்னவாக இருக்கும்?
பதில்:- அமைதி, வளம், வளர்ச்சி இது எங்கள் தேர்தல் கோரிக்கையாக இருக்கும்.
இவ்வாறு செய்தியாளர்களிடம் ஜெயலலிதா கூறினார்.
0 comments:
Post a Comment