பறிமுதல் செய்யப்பட்ட மாடுகள் ஒப்படைப்பு
***********************************************************
***********************************************************
கோமாரி நோய் பரவுவதையடுத்து, சத்தியமங்கலம் பகுதியில் மாடுகள்
விற்கக்கூடாது என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. இந்நிலையில், பவானிசாகர்
அருகே விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட 24 மாடுகளை வருவாய்த்துறையினர்
கைப்பற்றி சத்தி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அந்த மாடுகள்
அய்யம்பாளையம் ஜெயம் பிராணிகள் நல அறக்கட்டளையில் ஒப்படைக்கப்பட்டன.
இவ்வழக்கை விசாரித்த சத்தியமங்கலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம், மாடுகளை
உரிமையாளர்களிடம் திரும்ப ஒப்படைக்குமாறு உத்தரவிட்டதையடுத்து,
உரிமையாளர்களிடம் மாடுகளை ஒப்படைக்கிறார் ஜெயம் பிராணிகள் நல அறக்கட்டளை
தலைவர் கே.வி.கோவிந்தராஜ்.
0 comments:
Post a Comment