உலக எய்ட்ஸ் நோய் விழிப்புணர்வு தின மனித சங்கிலி!
*************************************************************
இன்று உலக அளவிலே அச்சுறுத்திவரும் உயிர்கொல்லி நோய் எய்ட்ஸ். இந்நோய்க்கு மருந்து கிடையாது. எய்ட்ஸ் நோய்க்கு முடிவு மரணம் மட்டுமே. எய்ட்ஸ் நோய் குறித்த விழிப்புணர்வை இளைய தலைமுறை மற்றும் பொதுமக்களிடம் ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் டிசம்பர் 1 ஆம் தேதி உலக எய்ட்ஸ் நோய் விழிப்புணர்வு தினமாக கடைபிடிக்கபடுகிறது.
இதை முன்னிட்டு புன்செய் புளியம்பட்டி விடியல் சமூகநல இயக்கம் மற்றும் தபோவனம் மாமகரிஷி ஈஸ்வரா குருகுலம் மெட்ரிக் பள்ளி சார்பில் எய்ட்ஸ் நோய் விழிப்புணர்வு மனித சங்கிலி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தபோவனம் மெட்ரிக் பள்ளி முதல்வர் முத்துக்குமார் தலைமை தாங்கினார். விடியல் சமூகநல இயக்க செயலாளர் எஸ்.ஜெயகாந்தன் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் மாணவ மாணவியர்கள் கைகோர்த்து எய்ட்ஸ் நோய் விழிப்புணர்வு இலைச்சினை வடிவமைத்தனர். பின்னர் எய்ட்ஸ் நோய் குறித்த விழிப்புணர்வு படம் திரையிடப்பட்டது.
இந்நிகழ்ச்சிகளில் தபோவனம் மெட்ரிக் பள்ளி ஆசிரியர்கள், மாணவ மாணவியர்கள் உள்பட 300இக்கும் மேற்பட்டோர் பங்கு கொண்டனர்.
*************************************************************
இன்று உலக அளவிலே அச்சுறுத்திவரும் உயிர்கொல்லி நோய் எய்ட்ஸ். இந்நோய்க்கு மருந்து கிடையாது. எய்ட்ஸ் நோய்க்கு முடிவு மரணம் மட்டுமே. எய்ட்ஸ் நோய் குறித்த விழிப்புணர்வை இளைய தலைமுறை மற்றும் பொதுமக்களிடம் ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் டிசம்பர் 1 ஆம் தேதி உலக எய்ட்ஸ் நோய் விழிப்புணர்வு தினமாக கடைபிடிக்கபடுகிறது.
இதை முன்னிட்டு புன்செய் புளியம்பட்டி விடியல் சமூகநல இயக்கம் மற்றும் தபோவனம் மாமகரிஷி ஈஸ்வரா குருகுலம் மெட்ரிக் பள்ளி சார்பில் எய்ட்ஸ் நோய் விழிப்புணர்வு மனித சங்கிலி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தபோவனம் மெட்ரிக் பள்ளி முதல்வர் முத்துக்குமார் தலைமை தாங்கினார். விடியல் சமூகநல இயக்க செயலாளர் எஸ்.ஜெயகாந்தன் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் மாணவ மாணவியர்கள் கைகோர்த்து எய்ட்ஸ் நோய் விழிப்புணர்வு இலைச்சினை வடிவமைத்தனர். பின்னர் எய்ட்ஸ் நோய் குறித்த விழிப்புணர்வு படம் திரையிடப்பட்டது.
இந்நிகழ்ச்சிகளில் தபோவனம் மெட்ரிக் பள்ளி ஆசிரியர்கள், மாணவ மாணவியர்கள் உள்பட 300இக்கும் மேற்பட்டோர் பங்கு கொண்டனர்.
0 comments:
Post a Comment