புன்செய்ப்புளியம்பட்டி தற்காலிக பஸ்நிலையம் இடமாற்றம்
புன்செய்ப் புளியம்பட்டி தற்காலிக பஸ் நிலையம் |
புன்செய்ப் புளியம்பட்டி தற்காலிக பஸ் நிலையம் இடமாற்றம் செய்யப் பட்டது.
புன்செய்புளியம்பட்டி நகராட்சி அலுவலகம் அருகே உள்ள பேருந்து நிலையம் கடந்த 1993 ம் ஆண்டு கட்டப்பட்டது. கடந்த 5 ஆண்டுளாக பேருந்து நிலைய மேற்கூரை பலமுறை இடிந்து விழுந்ததால் பயணிகள் காயமடைந்தனர். இதனால் பேருந்து நிலையத்தை இடித்து புதியதாக பேருந்து நிலையம் கட்ட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
கடந்த ஆண்டு பேருந்து நிலையத்தை இடிப்பதற்கான அனுமதி பெற்று தரைமட்டமாக்கப்பட்டது. இதையடுத்து, இதன் அருகில் உள்ள சீரணி அரங்கத்தில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு இதுவரை செயல்பட்டு வந்தது. புதிய பேருந்து நிலையம் கட்ட ரூ.2 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதால் இடிக்கப்பட்ட பேருந்து நிலையத்துடன் சீரணி அரங்கத்தையும் இணைத்து விரிவுபடுத்தப்பட்ட பேருந்து நிலையம் கட்ட நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை தற்காலிக பேருந்து நிலையம் வாரசந்தை வளாகத்திற்கு மாற்றப்பட்டது.
புன்செய்புளியம்பட்டி நகராட்சி அலுவலகம் அருகே உள்ள பேருந்து நிலையம் கடந்த 1993 ம் ஆண்டு கட்டப்பட்டது. கடந்த 5 ஆண்டுளாக பேருந்து நிலைய மேற்கூரை பலமுறை இடிந்து விழுந்ததால் பயணிகள் காயமடைந்தனர். இதனால் பேருந்து நிலையத்தை இடித்து புதியதாக பேருந்து நிலையம் கட்ட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
கடந்த ஆண்டு பேருந்து நிலையத்தை இடிப்பதற்கான அனுமதி பெற்று தரைமட்டமாக்கப்பட்டது. இதையடுத்து, இதன் அருகில் உள்ள சீரணி அரங்கத்தில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு இதுவரை செயல்பட்டு வந்தது. புதிய பேருந்து நிலையம் கட்ட ரூ.2 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதால் இடிக்கப்பட்ட பேருந்து நிலையத்துடன் சீரணி அரங்கத்தையும் இணைத்து விரிவுபடுத்தப்பட்ட பேருந்து நிலையம் கட்ட நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை தற்காலிக பேருந்து நிலையம் வாரசந்தை வளாகத்திற்கு மாற்றப்பட்டது.
0 comments:
Post a Comment