தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday, December 25, 2013

குடிநீர் பாதுகாப்பு குறித்து ஊராட்சித்தலைவர்களுக்கு பயிற்சி

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் குடிநீர் மாசுபாடு &  பாதுகாப்பு குறித்த பயிற்சி

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் குடிநீர் மாசுபாடு குறித்தும், அதனை தடுக்கும் வழிமுறைகள் குறித்தும், குடிநீர் வீணாவதை தடுக்கும் வழிமுறைகள் பற்றி ஒருநாள் விழிப்புணர்வு பயிற்சி பவானிசாகர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.
பவானிசாகர் ஒன்றியக்குழு தலைவர் பழனிச்சாமி தலைமை தாங்கி கையேடுகள் வழங்கி  பயிற்சியினை துவக்கி வைத்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பத்மா(வட்டார ஊராட்சி), லியாகத் அலி (கிராம ஊராட்சி) முன்னிலை வகித்தனர். பயிற்சியில் பங்கேற்ற ஊராட்சித்தலைவர்கள், ஊராட்சி செயலர்கள், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு கொடுமுடி சுரபி பவுண்டேசன் இயக்குனர் சுந்தரமூர்த்தி, பயிற்றுநர் சுரேஷ்குமார் ஆகியோர் குடிநீர் தரக்கட்டுப்பாடு மற்றும் சுகாதாரம் குறித்து பயிற்சியளித்தனர்.
பயிற்சியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் உதவி
செயற் பொறியாளர் மணிவண்ணன், உதவிப்பொறியாளர் சுந்தர்சிங்பால் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் கண்ணன் நன்றி கூறினார்.

0 comments:

Post a Comment