குடற்நோயால் அவதிப்படும் ஆண்யானை: வனத்துறை தீவிர சிகிச்சை
****************************** ******************************
******************************
குடற்நோயால் பாதிக்கப்பட்ட ஆண்யானைக்கு பவானிசாகர் வனத்துறையினர் புதன்கிழமை தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
சத்தியமங்கலம்
அடுத்துள்ள பவானிசாகர் வனப்பகுதியில் ஏராளமான யானைகள் உள்ளன. நாள்தோறும்
மாலை நேரத்தில் பவானிசாகர் அணை நீர்த் தேக்கப் பகுதியில் யானைகள் கூட்டம்
கூட்டமாக நீர் அருந்தது வழக்கும். இவ்வாறு அணைக்கு வந்த யானைகளில் 10
வயதுள்ள ஆண்யானை வழிதவறி காராச்சிக்கொரை காட்டுக்குள் புகுந்தது. அது
அப்பகுதியில் உள்ள சோளக்காடு, வாழைத்தோட்டத்தில் நுழைந்து வாழைகளை தின்று
விவசாயப் பயிர்களை சேதப்படுத்தியது. இந்நிலையில்,புதன்கிழமை
உடல்நலக்குறைவால் சோர்ந்து காணப்பட்ட ஆண்யானை காராச்சிக்கொரை புங்கார்
காலனி என்ற இடத்தில் திடீரென மயங்கி விழுந்தது. அங்கு வந்த பவானிசாகர்
வனச்சரக அலுவலர் சிவசுப்பிரமணியம்,கால்நடை மருத்துவர் இளையரசன் மற்றும்
வனத்துறையினர் ஆகியோர் யானைக்கு காது வழியாக மருந்து செலுத்தி சிகிச்சை
அளித்தனர்.யானையின் உடலை பரிசோதனை செய்த மருத்துவகுழுவினர் அது குடற்நோயால்
பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.இதையடுத்து. யானைக்கு தொடர்ந்து
சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.கால்நடை மருத்துவ குழுவினர் அதே இடத்தில்
முகாமிட்டு இரவுமுழுவதும் யானையின் உடல்நிலையை கண்காணிக்க ஏற்பாடுகள்
செய்யப்பட்டுள்ளதாக வனச்சரக அலுவலர் சிவசுப்பிரமணியம் புதன்கிழமை
தெரிவித்தார்.
0 comments:
Post a Comment