தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, December 31, 2013

புன்செய் புளியம்பட்டி புதிய பேருந்து நிலையம் கட்டும் பணிமுதல்வர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார்
*************************************************************************************************************

முதல்வர் ஜெயலலிதா காணொளிக்காட்சி மூலம் அடிக்கல் நாட்டிய போது எடுத்த படம்

புன்செய் புளியம்பட்டி புதிய பஸ்நிலையம் கட்டுவதற்கான பணியை தமிழக முதல்வர் ஜெயலலிதா காணொளிக்காட்சி மூலம் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

புன்செய் புளியம்பட்டி புதிய பஸ்நிலையம் கட்டுவதற்காக தமிழக அரசு  நிதியிலிருந்து ரூ.2 கோடி மானியமாக வழங்கியது. இதையடுத்து பஸ்நிலையம் அருகில் உள்ள சீரணி அரங்கத்தையும் இணைத்து புதிய விரிவாக்கப்பட்ட பஸ்நிலையம் கட்டுவதற்கான பணியை கோடநாட்டிலிருந்து  தமிழக முதல்வர் ஜெயலலிதா காணொளிக்காட்சி மூலம் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.


பின்னர் புஞ்சைபுளியம்பட்டி பேருந்து நிலைய வளாகத்தில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் எஸ்.ஆர்.செல்வம், நகராட்சி கமிஷனர் செந்திவேல், பொறியாளர் லலிதாமணி, பவானிசாகர் ஒன்றியக்குழு தலைவர் வி. ஏ. பழனிச்சாமி, நகராட்சி துணைத்தலைவர் பாபு, நகர அண்ணா தி.மு.க செயலாளர் எம்.கே.ராஜேந்திரன்,  அண்ணா தி.மு.க நகரமன்ற உறுப்பினர்கள் உள்பட அனைத்து 18 நகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் பங்குகொண்டு  பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

0 comments:

Post a Comment