கடம்பூர் வனத்தில் 5 காட்டெருமைகள் கொல்லப்பட்ட வழக்கில் நாட்டுத்துப்பாக்கியுடன் ஒருவன் கைது.
****************************** ****************************** ***************************** **********
******************************
சத்தியமங்கலத்தை அடுத்துள்ள கடம்பூர் வனப்பகுதி,கரளையம் வனத்தில் கடந்த மாதம் 29 ம் தேதி 5 காட்டெருமைகள் மர்மமானமுறையில் இறந்து கிடந்தன. பிரேத பரிசோதனையில் யூரியா உரம் கலந்த நீரைகுடித்ததால் இறந்ததாக தெரிய வந்தது. நீரில் உரம் கலந்தது யார் என்பது குறித்து வனத்துறையினர் விசாரணையில் ஈடுபட்டனர். இதற்கிடையே நேற்று காலைகுத்தியாலத்தூர் கிராம நிர்வாக அலுவலர் பழனிச்சாமி சாலையில்சென்றுகொண்டிருந்தபோது சின்னஉள்ளேபாளையம் அருகே நாட்டுத்
துப்பாக்கியுடன் ஒருநபர் நின்றிருந்ததைக் கண்டார். உடனே கையும் களவுமாக
பிடித்து சத்தியமங்கலம் வனச்சரகர் சண்முகத்திடம் ஒப்படைத்தார்.
வனத்துறையினர்விசாரணையில் சின்னஉள்ளேபாளையம் கிராமத்தை சேர்ந்த சிவா(42)
என்பதும்,யூரியா உரம் கலந்து காட்டெருமைகளை கொன்றதும் தெரிய
வந்தது.சிவாவிடமிருந்த சிங்கிள்பேரல் நாட்டுத்துப்பாக்கி, வெடிமருந்து
மற்றும் யூரிய உரம் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப் பட்டார்.
0 comments:
Post a Comment