பவானி ஆற்றில் முறைகேடாக நீர் உறிஞ்சிய 8 விவசாய மின்இணைப்புகள் துண்டிப்பு - அதிகாரிகள் தீவிர நடவடிக்கை
****************************** ******************************
******************************
பவானிசாகர் பகுதியில் பவானி ஆற்றோரத்தில் முறைகேடாக மின்மோட்டார்
வைத்து நீர் உறிஞ்சும் விவசாயிகளின் மின்இணைப்பு துண்டிப்பு செய்யும் பணி
தீவிரமாக நடைபெற்று வருகிறது. பவானிசாகர் அணையிலிருந்து பவானி வரை
ஆற்றோரத்தில் விவசாயிகள் முறைகேடாக மின்மோட்டார் வைத்து நீர் உறிஞ்சுவதால்
கடைமடைப்பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு பாசனத்திற்கான நீர் சென்று
சேருவதில்லை என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததையடுத்து முறைகேடாக நீர்
உறிஞ்சுபவர்களின் மின் இணைப்பை துண்டிக்குமாறு நீதிமன்ற உத்திரவுடன் கூடிய
சுற்றறிக்கை மின்வாரியம், பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை மற்றும்
காவல்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து நேற்று முதல்
சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தலைமையிலான குழுவினர் பவானிசாகர் அணை அருகே
புங்கார் கிராமத்தில் ஒரு மின்இணைப்பும், அக்கரைதத்தப்பள்ளி கிராமத்தில் 7
மின் இணைப்புகளும் துண்டிப்பு செய்துள்ளனர். கிணறு மற்றும் ஆழ்குழாய்
கிணற்றுக்கான மின்இணைப்பு பெற்றுக்கொண்டு ஆறுவரை நிலத்தில் கேபிள் பதித்து
மின்மோட்டார் வைத்து நீர் உறிஞ்சிய மின் இணைப்புகள் மட்டும்
துண்டிக்கப்பட்டதாகவும், தொடர்ந்து இப்பணி நடைபெறும் எனவும் அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment