புன்செய் புளியம்பட்டி அருகே பிடிபட்ட மலைப்பாம்பு
புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள வடுகபாளையத்தைச் சேர்ந்தவர் முருகேசன்(60)
விவசாயி. இவர் புதன்கிழமை தோட்டத்தில் கட்டப்பட்டிருந்த பசுமாட்டை
பிடித்து வருவதற்காக மாட்டின் அருகே சென்றபோது வேலியோரத்தில் சுமார் 10 அடி
நீளமுள்ள மலைப்பாம்பு ஊர்ந்து செல்வதை பார்த்தார். இது குறித்து
பவானிசாகர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அங்கு வந்த பவானிசாகர்
வனச்சரகர் சிவசுப்பிரமணியம், வனவர் ராஜமாணிக்கம், வனக்காப்பாளர்
கருப்புசாமி, வனக்குழு தலைவர் சின்ராஜ் ஆகியோர் மலைப்பாம்பை பிடித்து
வனச்சரக அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர். மருத்துவபரிசோதனைக்கு பின் அது
நல்ல நிலையில் இருப்பதை உறுதி செய்த பின், அதை விளாமண்டி மேற்கு
வனப்பகுதியில் அடர்ந்த காட்டுக்குள் பாதுகாப்பாக கொண்டு சென்று விட்டனர்.
0 comments:
Post a Comment