அடிப்படைவசதிகளை நிறைவேற்றகோரி புன்செய் புளியம்பட்டி நகராட்சி அலுவலகம் முற்றுகை
***************************************************************************************************
***************************************************************************************************
புன்செய் புளியம்பட்டி டிசம்பர் 3:
புன்செய் புளியம்பட்டி நகராட்சி 14 வது வார்டு இந்திரா நகர் பொதுமக்கள் பல்வேறு அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரி திங்கட்கிழமை காலை 10 மணியளவில் நகராட்சி அலுவலகத்தை முற்றுகைஇட்டனர்.
புன்செய் புளியம்பட்டி நகராட்சியில் 14வது வார்டில் அமைந்துள்ளது இந்திரா நகர். இங்கு 100இகும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த சுமார் 500 பேர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் போதுமான குடிநீர் வசதி மற்றும் கழிப்பிட வசதி இல்லை. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர். எனவே இப்பகுதியில் பொது குடிநீர் குழாய் அமைக்க வேண்டும் எனவும் கழிப்பிட வசதி ஏற்படுத்தி தரவேண்டும் எனவும் வலியுறுத்தி பவானிசாகர் ஒன்றிய ம.தி.மு.க. செயலாளரும் , 13வது வார்டு கவுன்சிலருமான மயில்சாமி, 7வது வார்டு கவுன்சிலர் சதாசிவம் தலைமையில் 150 இகும் மேற்பட்ட பெண்கள் புன்செய் புளியம்பட்டி நகராட்சி அலுவலகத்தை முற்றுகை இட்டனர். மேலும் தமிழக அரசு வழங்கும் விலையில்லா மிக்சி, க்ரண்டர், மின்விசிறி இதுவரை வழங்கப் படவில்லை. அவற்றை வழங்க உரிய அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டுமெனவும் வலியுறித்தினர். பின்னர் நகராட்சி பொறியாளர் லலிதாமணி அவர்களிடம் மனு ஒன்றையும் அளித்தனர். அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர். திடீரென நடந்த முற்றுகை போராட்டத்தினால் நகராட்சி அலுவலகத்தில் சிறுது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
புன்செய் புளியம்பட்டி நகராட்சி 14 வது வார்டு இந்திரா நகர் பொதுமக்கள் பல்வேறு அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரி திங்கட்கிழமை காலை 10 மணியளவில் நகராட்சி அலுவலகத்தை முற்றுகைஇட்டனர்.
புன்செய் புளியம்பட்டி நகராட்சியில் 14வது வார்டில் அமைந்துள்ளது இந்திரா நகர். இங்கு 100இகும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த சுமார் 500 பேர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் போதுமான குடிநீர் வசதி மற்றும் கழிப்பிட வசதி இல்லை. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர். எனவே இப்பகுதியில் பொது குடிநீர் குழாய் அமைக்க வேண்டும் எனவும் கழிப்பிட வசதி ஏற்படுத்தி தரவேண்டும் எனவும் வலியுறுத்தி பவானிசாகர் ஒன்றிய ம.தி.மு.க. செயலாளரும் , 13வது வார்டு கவுன்சிலருமான மயில்சாமி, 7வது வார்டு கவுன்சிலர் சதாசிவம் தலைமையில் 150 இகும் மேற்பட்ட பெண்கள் புன்செய் புளியம்பட்டி நகராட்சி அலுவலகத்தை முற்றுகை இட்டனர். மேலும் தமிழக அரசு வழங்கும் விலையில்லா மிக்சி, க்ரண்டர், மின்விசிறி இதுவரை வழங்கப் படவில்லை. அவற்றை வழங்க உரிய அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டுமெனவும் வலியுறித்தினர். பின்னர் நகராட்சி பொறியாளர் லலிதாமணி அவர்களிடம் மனு ஒன்றையும் அளித்தனர். அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர். திடீரென நடந்த முற்றுகை போராட்டத்தினால் நகராட்சி அலுவலகத்தில் சிறுது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
0 comments:
Post a Comment