தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் கிராமம்தோறும் பிரசார கலைநிகழ்ச்சிகள்
********************************************************************************************
********************************************************************************************
சத்தியமங்கலம், டிச.7.
தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் கிராமம்தோறும்
பொதுமக்களிடம் விழிப்புணர்வு நாடகங்கள் மற்றும் பிரசார கலைநிகழ்ச்சிகள்
நடத்தப்பட்டு வருகிறது.
அதன் ஒருபகுதியாக பவானிசாகர்
ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நல்லூர் ஊராட்சி பகுதிகளில் தமிழ்நாடு ஊரக
வாழ்வாதார இயக்கம் சார்பில் நேற்று கலைநிகழ்ச்சிகள் நடந்தது. இக்குழுவினர்
கிராமம்தோறும் சென்று ஆடல்,பாடல், நாடகம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி
வருகின்றனர். இதில் ஏழைகளுக்கும் மகளிர்க்கும் முன்னுரிமை அளிப்போம்,
வலுவான மக்கள் அமைப்புகளை உருவாக்குவோம், நாணயமான செயல்பாடு மூலம்
வெளிப்படையான நிர்வாகம் செய்திடுவோம், ஏழை மக்களின் வளர்ச்சி மற்றும்
வாழ்வாதார இயக்கத்தின் வெற்றிக்கு அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம்,
மாற்று திறனாளிகள், நலிவுற்றோருக்கு உறுதுணையாக இருப்போம், அனைவரும் ஒன்று
கூடி முடிவெடுத்து செயல்படுவோம் ஆகிய கருத்துகளை வலியுறித்தினர். மேலும்
கிராமப்புற சுகதாரதினை பற்றி பாடல் மூலம் விளக்கி கூறினர். கிராம மக்கள்
அனைவருக்கும் துண்டு பிரசுரங்களையும் வழங்கினர். இந்நிகழ்ச்சியினை ஏராளமான
பொதுமக்கள் கண்டுகளித்தனர்.
0 comments:
Post a Comment