தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday, December 19, 2013

உரிய ஆவணங்கள் இன்றி மரத்துண்டுகள் ஏற்றிய லாரிகள் பறிமுதல்
*************************************************************************
உரிய ஆவணங்கள் இன்றி ம்ரம் பாரம் ஏற்றிய 3 லாரிகளை வருவாய்த் துறையினர் பறிமுதல் செய்தனர்.


சத்தியமங்கலம் அடுத்துள்ள பவானிசாகர் பகுதியில் 50க்கும் மேற்பட்ட காகித ஆலைகள் இயங்கி வருகின்றன.இந்த ஆலைக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மரத்துண்டுகள் விநியோகிக்கப்படுகின்றன.இங்குள்ள ஆலைகளுக்கு  சப்ளை செய்யப்படும் மரத்துண்டுகள் போதிய ஆவணங்கள் இன்றி கடத்தப்படுவதாக கோபி சார் ஆட்சியருக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மரத்துண்டுகள் பாரம் ஏற்றிய லாரிகள் கணக்காணிக்கப்பட்டன.
 
இந்நிலையில்,வருவாய் ஆய்வாளர் தங்கராஜ் மற்றும் வருவாய்த்துறையினர் வியாழக்கிழமை  பகுத்தம் பாளையம் அருகே மரத்துண்டுகளை ஏற்றிய 3 லாரிகளை நிறுத்தி சோதனையிட்டார்.  அப்போது, அவை மணப்பாறை,  ஆலங்குடி ஆகிய இடங்களில் இருந்து வருவதும் உரிய ஆவணங்கள் இன்றி பவானிசாகர் ஆண்டாள் காகித ஆலைக்கு சப்ளை செய்ய முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து, உரிய ஆவணங்கள் இன்றி மரம் கடத்தியதாக  3 லாரிகளையும் பறிமுதல் செய்து சத்தி வட்டாட்சியர் அலுவலக்தில் ஒப்படைக்கப்பட்டது.

0 comments:

Post a Comment