உரிய ஆவணங்கள் இன்றி மரத்துண்டுகள் ஏற்றிய லாரிகள் பறிமுதல்
*************************************************************************
*************************************************************************
உரிய ஆவணங்கள் இன்றி ம்ரம் பாரம் ஏற்றிய 3 லாரிகளை வருவாய்த் துறையினர் பறிமுதல் செய்தனர்.
சத்தியமங்கலம்
அடுத்துள்ள பவானிசாகர் பகுதியில் 50க்கும் மேற்பட்ட காகித ஆலைகள் இயங்கி
வருகின்றன.இந்த ஆலைக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து
மரத்துண்டுகள் விநியோகிக்கப்படுகின்றன.இங்குள் ள ஆலைகளுக்கு சப்ளை
செய்யப்படும் மரத்துண்டுகள் போதிய ஆவணங்கள் இன்றி கடத்தப்படுவதாக கோபி சார்
ஆட்சியருக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மரத்துண்டுகள் பாரம்
ஏற்றிய லாரிகள் கணக்காணிக்கப்பட்டன.
இந்நிலையில்,வருவாய் ஆய்வாளர் தங்கராஜ் மற்றும்
வருவாய்த்துறையினர் வியாழக்கிழமை பகுத்தம் பாளையம் அருகே மரத்துண்டுகளை
ஏற்றிய 3 லாரிகளை நிறுத்தி சோதனையிட்டார். அப்போது, அவை மணப்பாறை,
ஆலங்குடி ஆகிய இடங்களில் இருந்து வருவதும் உரிய ஆவணங்கள் இன்றி பவானிசாகர்
ஆண்டாள் காகித ஆலைக்கு சப்ளை செய்ய முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து,
உரிய ஆவணங்கள் இன்றி மரம் கடத்தியதாக 3 லாரிகளையும் பறிமுதல் செய்து சத்தி
வட்டாட்சியர் அலுவலக்தில் ஒப்படைக்கப்பட்டது.
0 comments:
Post a Comment