ஏற்காடு இடைதேர்தல் வெற்றி - புளியம்பட்டி அ.தி.மு.க வினர் கொண்டாட்டம்
*******************************************************************************************************************
*******************************************************************************************************************
புன்செய் புளியம்பட்டி டிசம்பர் 10: புன்செய் புளியம்பட்டி நகர அம்மா
பேரவையின் சார்பாக ஏற்காடு இடைதேர்தல் வெற்றி கொண்டாட்டம் நடைபெற்றது,
ஏற்காடு சட்டப்பேரவைத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில்
அதிமுக வேட்பாளர் பெ.சரோஜா தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர்
வெ.மாறனைக் காட்டிலும் 78,116 வாக்குகள் அதிகம் பெற்று அமோக வெற்றி
பெற்றார். இவ்வெற்றி மாண்புமிகு அம்மா அவர்களின் இரண்டரை ஆண்டு கால
நல்லாட்சிக்கு கிடைத்த அமோக வெற்றி. ஏற்காடு இடைதேர்தல் வெற்றியை தமிழகம்
முழுவதும் அ.தி.மு.க வினர் கொண்டாடி வருகிறார்கள்.
புன்செய் புளியம்பட்டி அம்மா பேரவை செயலாளர் ஆர்.ராமசாமி
தலைமையில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் திரு உருவ சிலைக்கு
அ.தி.மு.க. வினர் மாலை அணிவித்து பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி
கொண்டாடினார்கள். இந்நிகழ்ச்சியில் நகரமன்ற உறுப்பினர் ஜக்கரியா,
ஜி.கே.மூர்த்தி, ஏ.ராஜன், ஆறுமுகம், ஆர். லோகநாதன், தலைவர் ஈஸ்வரன், சிவா,
பட்டு பழனிசாமி, இராமச்சந்திரன், வக்கீல் சரவணன், கிட்டுசாமி மற்றும் கழக
நிர்வாகிகள் உள்பட பலர் பங்கு கொண்டனர்.
0 comments:
Post a Comment