ஆட்டோ நிறுத்த இடம் கேட்டு ஆட்டோ தொழிலாளர்கள் போராட்டம்
****************************** ***************************** *********************
******************************
ஆட்டோ நிறுத்துவதற்கென தனி இடம் கேட்டு சத்தியில் ஆட்டோ தொழிலாளர்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சத்தியமங்கலம் நகரப்பகுதியில் இயங்கும் ஆட்டோக்கள்
புதிய பஸ்நிலையம், மைசூர் சாலை ஆகிய இடங்களில் நிறுத்தி வைக்கப்படுகின்றன.
நெடுஞ்சாலையோர இடங்களில் ஆட்டோக்கள் நிறுத்தக்கூடாது, பயணிகளுக்கு இடையூறு
இல்லாத இடத்தில் ஆட்டோக்களை நிறுத்துமாறு நெடுஞ்சாலைத் துறையினர் ஆட்டோ
ஓட்டுநர்களுக்கு நோட்டீஸ் விநியோகம் செய்தனர். இதை கண்டித்து, சத்தி நகர
ஆட்டோ ஓட்டுநர்கள் பவானீஸ்வரர் ஆலய சாலை முன் ஆட்டோக்களை நிறுத்தி
சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். அங்கு வந்த பவானிசாகர் எம்எல்ஏ
பி.எல்.சுந்தரம், ஆட்டோ நிறுத்துவதற்கென தனிஇடம் ஒதுக்குவதாக
உறுதியளித்ததையடுத்து அனைவரும் மறியலை கைவிட்டனர்.
0 comments:
Post a Comment