திம்பம் மலைப்பாதையில் 108 ஆம்புலன்சில் பிரசவம்
******************************************************************************
******************************************************************************
சத்தியமங்கலம், டிச.6. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடி
மலைப்பகுதி தலமலை அருகே உள்ள தொட்டபுரம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி
சித்தப்பா(23). இவரது மனைவி கீதா(18) நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு நேற்று
மதியம் பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து பிரசவத்திற்காக 108 ஆம்புலன்ஸ்
மூலம் கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று கொண்டிருந்தனர். ஆம்புலன்சை
டிரைவர் சின்னப்பன் ஓட்டினார். மருத்துவ உதவியாளர் இளையராஜா உடனிருந்தார்.
திம்பம் மலையிலிருந்து கீழே இறங்கும் போது கீதாவிற்கு அதிக வலி
ஏற்பட்டதால் 26 வது கொண்டை ஊசி வளைவில் வேனை நிறுத்தி மருத்துவ உதவியாளர்
இளையராஜா பிரசவம் பார்த்தார். அப்போது கீதாவிற்கு அழகான பெண்குழந்தை
பிறந்தது. குழந்தை பிறந்ததால் மீண்டும் தாளவாடி ஆரம்ப சுகாதார நிலையத்தில்
அனுமதிக்கப்பட்டுள்ளார். தாயும் சேயும் நலமாக உள்ளனர்.
0 comments:
Post a Comment