தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday, December 9, 2013

பனிமூட்டம்:திம்பம் பாதையில் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்
கடுங்குளிர்:பொதுமக்கள் அவதி
*******************************************************************************************


தமிழகத்தில் குளிர் தீவிரமடைந்துள்ளதால் சத்தியமங்கலம் பகுதியில் கடுங்குளிர் நிலவுகிறது.இதனால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

சத்தியமங்கலம் பகுதியில்  பகலில் வெயிலும் இரவில் குளிரும் நிலவுகிறது. மாலை 6 மணிக்கு பனிப்பொழிவு தொடங்கி மறுநாள் காலை 7 மணிவரை  நீடிப்பதால் கடும் குளிரில் மக்கள் அவதிப்படுகின்றனர். இரவு நேரம் மற்றும் அதிகாலையில் வேலைக்கு செல்பவர்கள் குளிர் காரணமாக பணிக்கு செல்லமுடியாமல் தவிக்கின்றனர்.மேலும் அவர்கள் குளிரை சமாளிக்க ஸ்வெட்டர் மற்றும் பனிக்குல்லா அணிந்து செல்கின்றனர்.

மேகமூட்டமும் பனிப்பொழிவும் காலை 7 மணிவரை நீடிப்பதால் சாலைகளில் எதிரேவரும் வாகனங்கள் தெளிவாக தெரியாமல் வாகனஓட்டிகள் சிரமப்படுகின்றனர். குளிரால் பொதுமக்கள் சளி, தொண்டைவலி நோய் தாக்குதலுக்குள்ளாகியுள்ளனர்.
சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் விவசாயமே முக்கியத் தொழிலாக இருப்பதால் மாலை நேரங்களில் நிலவும் கடுங்குளிரால் தோட்டத்துக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் தவிக்கின்றனர். 

சத்தியமங்கலம் திம்பம் மலைப்பகுதியில் கடும் பனிப்பொழிவு காரணமாக வாகன ஓட்டிகள் சிரமத்துடன் வாகனங்களை இயக்குகின்றனர்.  சாலையில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாதபடி பனிமூட்டம் ஏற்பட்டதால் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து செல்கின்றன. வாகன ஓட்டிகள் அனைத்து முகப்பு விளக்குகளையும் எரிய விட்டபடி செல்கின்றனர்.

0 comments:

Post a Comment