புன்செய் புளியம்பட்டி அருகே அடையாளம் தெரியாத வாகனம்
மோதி புள்ளிமான் சாவு.
-------------------------------------------------------------------------------------------------------------
மோதி புள்ளிமான் சாவு.
-------------------------------------------------------------------------------------------------------------
புன்செய் புளியம்பட்டி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி புள்ளிமான் இறந்தது.
ஈரோடு மாவட்டம், புன்செய் புளியம்பட்டி அருகே உள்ள விளாமுண்டி வனப்பகுதியில் ஏராளமான மான்கள் உள்ளன. இங்குள்ள மான்கள் தண்ணீரை தேடி அடிக்கடி காட்டுப்பகுதியை விட்டு வெளியே வருகின்றன. அவ்வாறு வரும் மான்கள் வனப்பகுதி ஓரம் உள்ள புன்செய் புளியம்பட்டி –சத்தி நெடுஞ்சாலை, பவானிசாகர்–மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையை கடந்து செல்லும்போது வாகனத்தில் அடிபட்டு இறந்து விடுவது வழக்கமாகி விட்டது.
இந்தநிலையில், புன்செய் புளியம்பட்டி –சத்தியமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று காலை புள்ளிமான் ஒன்று இறந்து கிடந்தது. இதைப்பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்கள். தகவல் கிடைத்ததும் வனத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மானின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில், இறந்து கிடந்தது 4 வயதுடைய பெண் புள்ளிமான் என்றும், விளாமுண்டி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய இந்த புள்ளிமான், ரோட்டை கடக்க முயன்று உள்ளது. அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி படுகாயம் அடைந்து, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது தெரியவந்தது. பின்னர் அங்கு கால்நடை டாக்டர் வரவழைக்கப்பட்டு, இறந்த மானின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு வனப்பகுதியிலேயே புதைக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம், புன்செய் புளியம்பட்டி அருகே உள்ள விளாமுண்டி வனப்பகுதியில் ஏராளமான மான்கள் உள்ளன. இங்குள்ள மான்கள் தண்ணீரை தேடி அடிக்கடி காட்டுப்பகுதியை விட்டு வெளியே வருகின்றன. அவ்வாறு வரும் மான்கள் வனப்பகுதி ஓரம் உள்ள புன்செய் புளியம்பட்டி –சத்தி நெடுஞ்சாலை, பவானிசாகர்–மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையை கடந்து செல்லும்போது வாகனத்தில் அடிபட்டு இறந்து விடுவது வழக்கமாகி விட்டது.
இந்தநிலையில், புன்செய் புளியம்பட்டி –சத்தியமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று காலை புள்ளிமான் ஒன்று இறந்து கிடந்தது. இதைப்பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்கள். தகவல் கிடைத்ததும் வனத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மானின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில், இறந்து கிடந்தது 4 வயதுடைய பெண் புள்ளிமான் என்றும், விளாமுண்டி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய இந்த புள்ளிமான், ரோட்டை கடக்க முயன்று உள்ளது. அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி படுகாயம் அடைந்து, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது தெரியவந்தது. பின்னர் அங்கு கால்நடை டாக்டர் வரவழைக்கப்பட்டு, இறந்த மானின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு வனப்பகுதியிலேயே புதைக்கப்பட்டது.
0 comments:
Post a Comment