தமிழகத்தில் முதன்முறையாக கோணமூலை ஊராட்சியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கேன் விற்பனை துவக்க விழா
சுற்றுச்சூழல் அமைச்சர் தோப்பு என்.டி. வெங்கடாசலம் துவக்கி வைத்தார்
****************************** ******************************
தமிழக சுற்றுச்சூழல் அமைச்சர் தோப்பு என்.டி. வெங்கடாசலம் சுத்திகரிப்பு நிலைய எந்திரத்தை இயக்கி விழாவை துவக்கி வைத்து பேசியதாவது ஏழை மக்கள் பயன்பெறும் சுத்தி கரிக்கப்பட்ட தண்ணீரை தயாரிக்கும் பணியில் கோண மூலை ஊராட்சி ஈடுபட்டுள்ளது பாராட்டுக் குரியது.
சுற்றுச்சூழல் அமைச்சர் தோப்பு என்.டி. வெங்கடாசலம் துவக்கி வைத்தார்
******************************
சுற்றுச்சூழல் அமைச்சர் தோப்பு என்.டி. வெங்கடாசலம் துவக்கி வைத்தார் |
தமிழகத்தில் முதன்முறையாக கோணமூலை ஊராட்சியில்
சுத்தகரிக்கப்பட்ட குடிநீர கேன் விற்பனையை சுற்றுச்சூழல் அமைச்சர் தோப்பு
என்.டி. வெங்கடாசலம் புதன்கிழமை துவக்கி வைத்தார்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம் கோணமூலை ஊராட்சி
காந்திநகரில் ரூ.3.10 லட்சம் செலவில் புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்
அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையத்தில் தினமும் 5 ஆயிரம் லிட்டர் தண்ணீரை
சுத்திகரித்து அதை 20 லிட்டர் கேனில் நிரப்பி பொதுமக்கள் விற்பனை செய்யும்
திட்ட துவக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.
தமிழக சுற்றுச்சூழல் அமைச்சர் தோப்பு என்.டி. வெங்கடாசலம் சுத்திகரிப்பு நிலைய எந்திரத்தை இயக்கி விழாவை துவக்கி வைத்து பேசியதாவது ஏழை மக்கள் பயன்பெறும் சுத்தி கரிக்கப்பட்ட தண்ணீரை தயாரிக்கும் பணியில் கோண மூலை ஊராட்சி ஈடுபட்டுள்ளது பாராட்டுக் குரியது.
தமிழகத்தில்
முதன்முறையாக பயன் பெறும் வகையில் கடம்பூர் மற்றும் ஒங்கல்வாடியில் ஆரம்ப
சுகாதார நிலையம் அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. திமுகவில்
அரசுத் திட்டங்கள் நேரடியா மக்களுக்கு சென்றடைய வில்லை. முதல்வர் ஆட்சியில்
அரசு திட்டங்களை பயனாளிகளுக்கு அமைச்சர்,ஆட்சியர், எம்எல்ஏ, மாவட்ட
ஊராட்சித் தலைவர் உட்பட அனைவரும் நேரிடியாக மக்களை சந்தித்து வழங்கி
வருகிறோம். முதல்வர் கொண்டு வந்த அம்மா திட்டம் மக்களிடையே பெரும் வரவேற்பை
பெற்றுள்ளது. கோணமூலை ஊராட்சியில் ரூ.47 லட்சம் செலவில் தார் சாலை
அமைக்கப்படுகிறது.இப்பகுதியில் 108 பேருக்கு நெசவாளர் பசுமை வீடு கட்டும்
திட்டத்திற்கான வேலை உத்தரவுவழங்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே தமிழகத்தில்
தாலிக்கு தங்கம் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்கு இந்திய அளவில்
வரவேற்பு உள்ளதால் வரும் 2023ல் முதல்வர் தான் இந்தியாவை ஆட்சி செய்வார்
என்றார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் எம்.கணேஷ், பவானிசாகர் எம்எல்ஏ
பி.எல்.சுந்தரம், புறநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் சதுமுகை
ஆறுமுகம்,ஒன்றியக்குழுத் தலைவர் வி.ஏ.பழனிச்சாமி,கோணமூலை ஊராட்சி அதிமுக
செயலாளர் மணிகண்ட சங்கர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
0 comments:
Post a Comment