தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Sunday, December 22, 2013

புன்செய் புளியம்பட்டி அருகே மானாவாரி நிலங்களில் நெல் சாகுபடி
நல்லூர் குளத்தையொட்டியுள்ள விளைநிலங்களில் நடவுப் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயத் தொழிலாளர்கள்

புன்செய் புளியம்பட்டி அருகேயுள்ள நல்லூர் குளத்தையொட்டியுள்ள விளைநிலங்களில் நெல் நடவுப் பணி நடந்து வருகிறது.

சத்தியை அடுத்துள்ள புன்செய் புளியம்பட்டி பகுதியில் மானாவாரி நிலங்கள் அதிகமாக உள்ளன.வறட்சியான பகுதி என்பதால் நிலக்கடலை, தீவனசோளம் போன்ற பயிர்களை விவசாயிகள் அதிக அளவில் பயிரிடுகின்றனர். 

கடந்த சில  மாதங்களுக்கு முன்பு பெய்த பலத்த மழையால் நல்லூர், புங்கம்பள்ளி ஆகிய குளங்கள் நிரம்பி வழிந்தன. குளத்தில் வெளியேரும் கசிவுநீர் அதனையொட்டியுள்ள விளைநிலங்களுக்கு சென்று நீர்ஊற்றாக மாறியுள்ளன. இதுதவிர, அப்பகுதி கிணறுகள் மற்றும் ஆழ்குழாய் கிணறுகளிலும் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதுவரை, மானாவாரி பயிர்களை சாகுபடி செய்து வந்த விவசாயிகள், இந்த நீர்வரத்தால் 100 க்கும் நிலங்களில் நெல் சாகுபடிக்கு தயாராகி உள்ளனர். இதன் ஒரு பகுதியாக, நல்லூர் குளத்தையொட்டியுள்ள பகுதியில் தற்போது நடவுப் பணி நடந்து வருகிறது.

நீர் நிறைந்து காணப்படும் நல்லூர் குளம்
இது குறித்து நல்லூர் விவசாயி தங்கராஜ் கூறியது: 15 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தான் நல்லூர் குளம் நிரம்பியுள்ளது. குளத்தில் இருந்து வீணாக வெளியேறும் கசிவுநீரைக் பயன்படுத்தி  நெல் நாற்றாங்கால் தயார் செய்து தற்போது நடவுப்பணி நடைபெற்று வருகிறது. 15 ஆண்டுகளுக்கு முன் குளத்தில் நீர்நிறைந்தபோது ஒரே தடவை நெல் பயிரிட்டோம். அதன்பிறகு இப்போதுதான் வறட்சி பகுதியான எங்களது நிலத்திலும் நெல் பயிபிடும் வாய்ப்பு கிடைத்துள்ளது.இந்த நீரை பயன்படுத்தி சிக்கனமாக நீர்ப்பாசனம் செய்தால் ஓராண்டு வரை தொடர்ந்து விவசாயம் செய்யமுடியும்  என்றார்.

0 comments:

Post a Comment