சத்தி திம்பம் மலைப்பாதையில் பனிமூட்டம்
****************************** ****************************** **
******************************
சத்தியமங்கலம்,டிசம்பர் 2:
சத்தியமங்கலம் திம்பம் மலைப்பகுதியில் கடும் பனிப்பொழிவு காரணமாக வாகன ஓட்டிகள் சிரமத்துடன் வாகனங்களை இயக்குகின்றனர்.
சத்தியமங்கலம் திம்பம் பகுதியில் சாரல் மழை பெய்து
வருகிறது. இதனால் திம்பம் வன ஓடைகளில் தண்ணீர் வழிந்தோடுகின்றன.
இந்நிலையில், கடந்த சில நாள்களாக பகலில் வெயில் காலநிலை இருந்தாலும் திம்பம் வனத்தில் கடும் குளிர் நிலவியது. பனிக்காலம்
துவங்கும் முன்னரே தற்போது திம்பத்தில் பனிபெய்யத் தொடங்கியுள்ளது.
காலை 9 மணிக்கு திம்பம் மலைப்பாதையில் பனிமூட்டம்
காணப்பட்டது. சாலையில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாதபடி பனிமூட்டம்
ஏற்பட்டதால் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து செல்கின்றன. வாகன ஓட்டிகள் அனைத்து
முகப்பு விளக்குகளையும் போட்டுக்கொண்டு செல்கின்றன. கடும் குளிர் காரணமாக
வாகன ஓட்டிகள் ஆங்காங்கே தீ மூட்டி குளிர்காய்ந்தனர்.
0 comments:
Post a Comment