புஞ்சைபுளியம்பட்டி பகுதியில் புகையிலை சாகுபடி தீவிரம்
புஞ்சைபுளியம்பட்டி வட்டார பகுதியில் புகையிலை சாகுபடி பணியில்
விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
நடப்பாண்டு
பருவமழை பொய்த்ததால் வறட்சியில் சிக்கி தவிக்கும் புஞ்சைபுளியம்பட்டி
பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து விவசாயப்பணி முடங்கியது.
இதற்கிடையே, காற்றழத்த தாழ்வு நிலை காரணமாக த 2 மாதங்களுக்கு முன்பு பெய்த
தொடர்மழை காரணமாக புளியம்பட்டி வட்டார பகுதியில் உள்ள நல்லூர்,
புங்கம்பள்ளி, நொச்சிக்குட்டை குளங்களும், சிறு தடுப்பணைகளும் நிரம்பின.
இதைத் தொடர்ந்து, கிணறுகள் மற்றும் ஆழ்குழாய் கிணறுகளில் நீர்மட்டம்
உயர்ந்ததால் விவசாயிகள் பயிர் சாகுபடி பணிக்கு நிலங்களை உழுது
தயார்படுத்தினர்.
குறிப்பாக, இப்பகுதி விவசாயிகள் புகையிலை சாகுபடியில்
ஆர்வம் காட்டி வருகின்றனர். நாற்றாங்கால் தயார் செய்து விதைகள் தூவி
நாற்றுக்கள் பக்குவமாக வளர்க்கப்பட்டு 60 நாட்கள் ஆனவுடன் அவை
பறிக்கப்பட்டு பின்னர் உழுது தயார் செய்யப்பட்டுள்ள நிலத்தில் பாத்திகள்
அமைத்து 2 க்கு 2 அடி இடைவெளியில் நடவு செய்து நீர்பாய்ச்சினர்.
தற்போது நாற்றுக்கள் நன்றாக செழித்து வளர்ந்துள்ளன.
புகையிலை பயிரில் வாய்க்கால் ஓரங்களில் ஊடுபயிராக சின்ன வெங்காயம் நடவு
செய்யப்பட்டுள்ளது. 120 நாள் பயிரான புகையிலை பயிருக்கு களைவெட்டுதல்,
சிம்பு எடுத்தல் போன்ற பணிகளை செய்து நல்ல முறையில் பராமரித்தால் போதுமான
லாபம் ஈட்ட முடியும் என பனையம்பள்ளி கிராமத்தை சேர்ந்த விவசாயி சுப்பைய்யன்
தெரிவித்தார்.
0 comments:
Post a Comment