கொழிஞ்சானூர் ஆதிதிராவிடர்காலனியில் ரூ.28 லட்சம் செலவில் தார்சாலை
****************************** ****************************** ****************************** *****************
******************************
சத்தியமங்கலம்
ஊராட்சி ஒன்றியம், இக்கரைநெகமம் ஊராட்சி, கொழிஞ்சானூரில் புதிய தார்சாலை
அமைப்பதற்கான அடிக்கல்நாட்டுவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.
உள்கட்டமைப்புத்திட்டத்தின் கீழ் ரூ.28 லட்சம் செலவில்
கொழிஞ்சானூர் ஆதிதிராவிடர்காலனி முதல் உதயம் நகர் வரை தார்சாலை அமைக்கும்
பணியை மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் எஸ்.ஆர்.செல்வம், பவானிசாகர் எம்எல்ஏ
பி.எல்.சுந்தரம் ஆகியோர் தொடங்கி வைத்தனர். அதனைத் தொடர்ந்து. பாரத
பிரதமர் கிராமச் சாலைத் திட்டத்தின் கீழ் ரூ.45 லட்சம் செலவில் சத்தி
சாலையில் இருந்து கோணமூலை வரையிலும் ரூ.66.45 லட்சம் செலவில்
அரியப்பம்பாளையம் சாலை முதல் குப்பந்துறை வரை கிராமச்சாலை அமைக்கும் பணியை
மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் எஸ்.ஆர்.செல்வம் பார்வையிட்டார். விழாவில்
பவானிசாகர் ஒன்றியக்குழு தலைவர் வி.ஏ.பழனிச்சாமி, மாவட்ட ஊராட்சிக்குழு
உறுப்பினர் அருக்காணிராஜேந்திரன், ஒன்றிய கவுன்சிலர் புஷ்பாசண்முகம்,
வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கே.மூர்த்தி, ஏ.சுந்தரம், துணைவட்டார வளர்ச்சி
அலுவலர் ஆர்.வெங்கடாசலம், ஒப்பந்ததாரர் பாலமுருகன் உள்ளிட்ட பலர் கலந்து
கொண்டனர்.
0 comments:
Post a Comment