காங்.செயற்குழு உறுப்பினராக முத்துக்குமார் தேர்வு
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயற்குழு உறுப்பினராக ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டியை சேர்ந்த எல்.முத்துக்குமாரை காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாகாந்தி நியமித்துள்ளார்.பிஏ வரை படித்துள்ள இவர் ஏற்கனவே ஒன்றுபட்ட கோவை மாவட்ட மாணவர் காங்கிரஸ் செயலாளர் மற்றும் தலைவராகவும், பிஎஸ்ஜி கலைக்கல்லூரியில் மாணவர் மன்ற செயலாளராகவும், தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் பொதுச்செயலாளராகவும், தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளராகவும் பதவி வகித்துள்ளார். 2002 முதல் 2013 வரை ஈரோடு வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment