துண்டிக்கப்பட்ட கிணறுகளுக்கு மீண்டும் மின்இணைப்பு
தமிழக அரசுக்கு விவசாயிகள் நன்றி
தமிழக அரசுக்கு விவசாயிகள் நன்றி
********************************************************************
பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் சுபத்ரா களஆய்வு |
பவானிசாகர்
அணைப்பகுதியில் இருந்து பவானி கூடுதுறை வரை ஆற்றங்கரையோரம் கிணறு அமைத்து
மின்மோட்டார் மூலம் விவசாயிகள் பாசனம் வசதி பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த சில நாள்களாக மின்வாரிய
அலுவலர்கள் பவானிசாகர், சத்தியமங்கலம் ஆற்றோர விவசாய கிணற்று மின்இணைப்பை
துண்டிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சில
நாள்களாக சத்தி, பவானிசாகர் பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான விவசாயிகள்
போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பொதுப்பணித்துறை, மின்வாரியம் அலுவலர்கள், காவல்துறை
உதவியுடன் ஆற்றில் இருந்து நேரடியாக தண்ணீர் எடுக்க அனுமதி இல்லை எனக்கூறி
சம்மந்தப்பட்ட 8க்கும் மேற்பட்ட மின்இணைப்புகள் துண்டித்தனர்.
,பிரச்னைக்குரிய ஆற்று பைப்லைன் மற்றும் மோட்டார்களை விவசாயிகள் அகற்றினால்
மீண்டும் இணைப்பு வழங்குவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து,
30க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆற்றில் இருந்து தண்ணீர் எடுப்பதை
நிறுத்திவிட்டு, தண்ணீர் எடுக்கும் விவசாய உபகரணங்களை எடுத்துச் சென்றனர்.
ஆயினும், மின்வாரிய அலுவலர்கள் மின்இணைப்பு தராமல்
தாமப்படுத்தினர்.இதைக் கண்டித்து, 100க்கும் மேற்பட்ட விவசாயிகள்
பவானிசாகர் பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிடுவதாக அறிவித்தனர்.
அங்கு வந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பொன்னி விவசாயிகளை
சமாதானப்படுத்தினர். அதைத் தொடர்ந்து, விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டனர்.
விவசாயிகளின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட
பொதுப்பணித்துறையினர் ஆற்றில் நேரடியாக தண்ணீர் எடுக்காத விவசாய கிணறுகளை
செவ்வாய்க்கிழமை களஆய்வு செய்தனர். உதவி செயற்பொறியாளர் சுபத்ரா ஆற்றில்
நேரடியாக களஆய்வு செய்து தடையில்லா சான்று வழங்கியதை அடுத்து மின்வாரிய
அலுவலர்கள் துண்டிக்கப்பட்ட 8 இணைப்புகளுக்கு மீண்டும் மின் இணைப்பு
வழங்கினர்.
மீண்டும் மின்இணைப்பு வழங்க நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்தனர்.
0 comments:
Post a Comment