புன்செய் புளியம்பட்டியில் தலசீமியா நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு நிதிஉதவி - தமிழக ஆசிரியர் கூட்டணி வழங்கியது.
******************************************************************************************************
தலசீமியா நோயால் பாதிக்கப்பட்ட சிறுவன் சுதர்சனுக்கு தமிழக ஆசிரியர் கூட்டணி ரூபாய் 35000 நிதிஉதவி வழங்கிய போது எடுத்த படம் |
புன்செய் புளியம்பட்டியில் தலசீமியா நோயினால் பாதிக்கப்பட்ட சிறுவன்
சுதர்சனுக்கு தமிழக ஆசிரியர் கூட்டணி பவானிசாகர் கிளை சார்பாக மருத்துவ
சிகிச்சை மேற்கொள்ள நிதிஉதவி வழங்கப்பட்டது.
அவினாசி அருகே உள்ள பிச்சண்டம் பாளையத்தை சார்ந்தவர் ராஜேந்திரன். அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் சுதர்சன். வயது 4. இவருக்கு தலசீமியா எனப்படும் கடுமையான ரத்த சோகை நோய் உள்ளது கண்டறியப்பட்டு சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள 30 லட்சம் வரை செலவாகும் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ள நிலையில் விவசாய கூலி வேளைக்கு சென்று வரும் குடும்ப பின்னணியில் உள்ள ஆசிரியர் ராஜேந்திரன் தனது மகனுக்கு உதவுமாறு சக ஆசிரியர்களுக்கும், சமூகநல அமைப்புகளுக்கும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்நிலையில் தலசீமியா நோயால் பாதிக்கப்பட்ட சிறுவன் சுதர்சனுக்கு உதவ தமிழக ஆசிரியர் கூட்டணியின் பவானிசாகர் கிளை முன்வந்தது. இதனை அடுத்து புன்செய் புளியம்பட்டியில் மருத்துவ சிகிச்சைக்கு நிதிஉதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பவானிசாகர் கிளை தலைவர் மார்கரேட் சில்வியா தலைமை தாங்கினார். கிளை செயலாளர் முத்து, கிளை பொருளாளர் அருள்முருகன், மாவட்ட துணை தலைவர் வாசுகி, வட்டார துணை தலைவர் ரமாதேவி, வட்டார துணை செயலாளர் மகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழக ஆசிரியர் கூட்டணி பொருளாளர் ஜெரோம் கலந்து கொண்டு ரூபாய் 35000 நிதிஉதவி தொகையினை சுதர்சனனின் தந்தை ராஜேந்திரன் அவர்களிடம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் லோகநாதன், ரமேஷ், குமாரசாமி உள்பட பலர் பங்கு கொண்டனர்.
தலசீமியா நோயினால் பதிக்கப்பட்ட சிறுவன் சுதர்சனுக்கு உதவு விரும்பும் நல்ல உள்ளங்கள் சுதர்சன் மறுவாழ்வு குழு தொலைபேசி எண் 9443762212, 9865070649 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
அவினாசி அருகே உள்ள பிச்சண்டம் பாளையத்தை சார்ந்தவர் ராஜேந்திரன். அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் சுதர்சன். வயது 4. இவருக்கு தலசீமியா எனப்படும் கடுமையான ரத்த சோகை நோய் உள்ளது கண்டறியப்பட்டு சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள 30 லட்சம் வரை செலவாகும் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ள நிலையில் விவசாய கூலி வேளைக்கு சென்று வரும் குடும்ப பின்னணியில் உள்ள ஆசிரியர் ராஜேந்திரன் தனது மகனுக்கு உதவுமாறு சக ஆசிரியர்களுக்கும், சமூகநல அமைப்புகளுக்கும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்நிலையில் தலசீமியா நோயால் பாதிக்கப்பட்ட சிறுவன் சுதர்சனுக்கு உதவ தமிழக ஆசிரியர் கூட்டணியின் பவானிசாகர் கிளை முன்வந்தது. இதனை அடுத்து புன்செய் புளியம்பட்டியில் மருத்துவ சிகிச்சைக்கு நிதிஉதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பவானிசாகர் கிளை தலைவர் மார்கரேட் சில்வியா தலைமை தாங்கினார். கிளை செயலாளர் முத்து, கிளை பொருளாளர் அருள்முருகன், மாவட்ட துணை தலைவர் வாசுகி, வட்டார துணை தலைவர் ரமாதேவி, வட்டார துணை செயலாளர் மகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழக ஆசிரியர் கூட்டணி பொருளாளர் ஜெரோம் கலந்து கொண்டு ரூபாய் 35000 நிதிஉதவி தொகையினை சுதர்சனனின் தந்தை ராஜேந்திரன் அவர்களிடம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் லோகநாதன், ரமேஷ், குமாரசாமி உள்பட பலர் பங்கு கொண்டனர்.
தலசீமியா நோயினால் பதிக்கப்பட்ட சிறுவன் சுதர்சனுக்கு உதவு விரும்பும் நல்ல உள்ளங்கள் சுதர்சன் மறுவாழ்வு குழு தொலைபேசி எண் 9443762212, 9865070649 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
0 comments:
Post a Comment