தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday, May 7, 2014

புன்செய் புளியம்பட்டியில் நகர அதிமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு


புன்செய் புளியம்பட்டி நகர அதிமுக சார்பில் நீர்மோர் , கம்பன்கூழ், நுங்கு, இளநீர், தண்ணீர் பந்தலை நகர செயலாளர் எம்.கே. ராஜேந்திரன் திறந்து வைத்து பொது மக்களுக்கு வழங்கினார்.

கோடை காலத்தில் தமிழகம் முழுவதும் குடிநீர், நீர்மோர் பந்தல்களை திறக்க வேண்டும் எனவும், கோடை வெப்பத்தில் மக்கள் தாகம் தீர்க்க சுகாதாரமான முறையில் நீர்மோர், பழரசங்களை பொது மக்களுக்கு வழங்கிட வேண்டும் எனவும் அண்ணா திமுகவினருக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டு இருந்தார். அதன் படி உத்தரவை ஏற்ற புளியம்பட்டி அண்ணா திமுகவினர் பழைய பேருந்து நிலையம் அருகில் எம்.ஜி.ஆர் சிலை அருகில் நீர்மோர் பந்தல் அமைக்க பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு நகர ஜெயலித பேரவை செயலாளர் ராமசாமி தலைமை தாங்கினார். நகர துணை செயலாளர் நாகராஜ், கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர எம்.ஜி.ஆர் அணி செயலர் சக்தி சண்முகம், ராஜன் சிவகுமார், பொன்னுசாமி, மகளிர் அணியின் ஆனந்தபிரபா, வனஜா உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் பங்கு கொண்டார்கள். இதில் எராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் நீர்மோர் , கம்பன்கூழ், நுங்கு, இளநீர், தண்ணீர் வாங்கி மகிழ்ச்சியுடன் அருந்தினர்.

0 comments:

Post a Comment